4 6 scaled
உலகம்செய்திகள்

பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்க தூண்டும் அமெரிக்கா… பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய நாடு

Share

பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்க தூண்டும் அமெரிக்கா… பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய நாடு

காஸா பகுதியில் கொடூர நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், அப்பாவி மக்களை கொன்று குவிக்கவும் இஸ்ரேலை அமெரிக்கா ஊக்குவிப்பதாக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஹமாஸ் படைகள் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதலை முன்னெடுத்ததில், 1,400 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்திருந்தது. அத்துடன் 240 பேர்களை பணயக்கைதியாகவும் ஹமாஸ் பிடித்துச் சென்றது.

அதன் பின்னர் பதில் தாக்குதல் முன்னெடுப்பதாக கூறி, இஸ்ரேல் ராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இதில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 10,000 கடந்துள்ளது.

இந்த நிலையில் தான், அமெரிக்காவின் கண்மூடித்தனமான ஆதரவு இஸ்ரேலை பாலஸ்தீன மக்களுக்கு எதிராக கொடூரமான செயல்களை செய்யவும் கொல்லவும் ஊக்குவிப்பதாக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், குண்டுவீச்சுகள் விரைவில் நிறுத்தப்பட வேண்டும், போர் நிறுத்தம் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி புறக்கணிக்கப்பட்ட அப்பாவி காஸா மக்களுக்கு உரிய மனிதாபிமான உதவிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.

மனிதகுலத்திற்கு எதிரான இந்த கொடூரமான குற்றங்கள் இனப்படுகொலை என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ரைசி, இது அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேலால் நடத்தப்படுகிறது என்றார்.

இதனிடையே, ஹமாஸ்-இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து, ஈராக்கில் அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள இராணுவ தளங்களை குறிவைத்து ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஈராக் ஈரானுடன் நெருக்கமான தொடர்பில் உள்ளது, இரு நாடுகளும் இதுவரை இஸ்ரேல் அரசாங்கத்தை அங்கீகரித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...