6 3 scaled
உலகம்செய்திகள்

பிரான்சில் கதவை திறந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி! மர்ம நபரை தேடும் பொலிஸார்

Share

பிரான்சில் கதவை திறந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி! மர்ம நபரை தேடும் பொலிஸார்

பிரான்ஸ் நாட்டில் 30 வயது பெண்ணொருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Montluc மாவட்டத்தின் லியோனின் 3வது வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டில் 30 வயது பெண்ணொருவர் மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டார்.

அதிர்ஷ்டவசமாக அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது தனது வீட்டில் அழைப்பு மணி அடிக்கும் சத்தம் கேட்டு கதவை திறந்தபோது, முகமூடி அணிந்த நபர் ஒருவர் அவரது வயிற்றில் இருமுறை கத்தியால் குத்தியுள்ளார் என்பது தெரிய வந்தது.

மேலும், அவரது வீட்டு வாசலில் ஸ்வஸ்திகா வர்ணம் பூசப்பட்டதைக் கண்டுபிடித்த பொலிஸார், கருப்பு உடை அணிந்த சந்தேக நபரைத் தேடும் நடவடிக்கையை பொலிஸார் தொடங்கியுள்ளனர்.

அத்துடன் அவர் யூதப் பெண் என்பது தெரிய வந்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போரை அடுத்து பிரான்ஸ் யூத-விரோத தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் பெண்ணொருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் இருந்து பிரான்சில் ‘857 யூத எதிர்ப்பு செயல்கள்’ நடந்துள்ளதாக உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனின் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பிரான்சில் உள்ள யூதர்கள், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் யூத-விரோதத்தை அதிகரித்து, வன்முறையின் இலக்குகளாக ஆக்கிவிட்டதாக அஞ்சுவதாக கூறப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...