rtjy 37 scaled
உலகம்செய்திகள்

ஐ.நாவின் தங்குமிடத்தை இலக்கு வைத்த இஸ்ரேல்

Share

ஐ.நாவின் தங்குமிடத்தை இலக்கு வைத்த இஸ்ரேல்

காசாவில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ஐ.நாவால் நடத்தப்படும் தங்குமிடம் மற்றும் வைத்தியசாலைகளின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவின் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் இராணுவத்திற்கும் கடந்த 7ஆம் திகதி ஆரம்பமான போர் இன்று 29 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.

வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் இராணுவம் காசாவிற்குள் நுழைந்து தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் ஐ.நாவால் நடத்தப்படும் தங்குமிடம் மற்றும் வைத்தியசாலைமீது இஸ்ரேல் இராணுவம் இன்று நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காசா நகருக்கு வடக்கே ஐ.நாவால் நடத்தப்படும் தங்குமிடத்தை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் இன்று வான்வழித் தாக்குதல் நடத்தியள்ளது.

இந்த தாக்குதலில் 20 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் காசா நகரில் உள்ள நாசர் வைத்தியசாலையின் வாயிலில் இன்று நிகழ்த்தப்பட்ட மற்றுமொரு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மேதத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 38
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோட்டத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்: மேலாளர்கள் உட்பட பலர் கைது என அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

இலங்கையின் தோட்டப் பகுதிகளில் அண்மைக்காலமாகத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் மீது நடத்தப்பட்ட மூன்று...

world 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவில் சுற்றுலாத்துறை மறுமலர்ச்சி: 10 இடங்களை முதன்மைப்படுத்த மாவட்ட செயலகம்

திட்டம்முல்லைத்தீவு மாவட்டத்தின் இயற்கை எழில் மற்றும் வரலாற்றுச் சிறப்புகளை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும்...

world 36
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தொடரும் கனமழை: 5 மாகாணங்களில் 75 மி.மீ-க்கும் அதிக மழை பெய்ய வாய்ப்பு

இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கீழ்த்தளத் தளம்பல் நிலை (Low-level atmospheric disturbance) காரணமாக, நாட்டின்...

world 35
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

உதய கம்மன்பிலவுக்கு பொலிஸ் அழைப்பாணை: ரங்க ராஜபக்ஷவின் மரணம் குறித்து விசாரணை

தூய்மையான ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, எதிர்வரும் மே...