rtjy 37 scaled
உலகம்செய்திகள்

ஐ.நாவின் தங்குமிடத்தை இலக்கு வைத்த இஸ்ரேல்

Share

ஐ.நாவின் தங்குமிடத்தை இலக்கு வைத்த இஸ்ரேல்

காசாவில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ஐ.நாவால் நடத்தப்படும் தங்குமிடம் மற்றும் வைத்தியசாலைகளின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவின் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் இராணுவத்திற்கும் கடந்த 7ஆம் திகதி ஆரம்பமான போர் இன்று 29 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.

வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் இராணுவம் காசாவிற்குள் நுழைந்து தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் ஐ.நாவால் நடத்தப்படும் தங்குமிடம் மற்றும் வைத்தியசாலைமீது இஸ்ரேல் இராணுவம் இன்று நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காசா நகருக்கு வடக்கே ஐ.நாவால் நடத்தப்படும் தங்குமிடத்தை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் இன்று வான்வழித் தாக்குதல் நடத்தியள்ளது.

இந்த தாக்குதலில் 20 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் காசா நகரில் உள்ள நாசர் வைத்தியசாலையின் வாயிலில் இன்று நிகழ்த்தப்பட்ட மற்றுமொரு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மேதத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...