tamilni 36 scaled
உலகம்செய்திகள்

காசா போரில் திருப்பம்: புது யுக்தியை கையாளும் இஸ்ரேல்

Share

காசா போரில் திருப்பம்: புது யுக்தியை கையாளும் இஸ்ரேல்

காசா போரில் இஸ்ரேலுக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ள ஹமாஸின் சுரங்கங்களை சமாளிக்க புதிய யுக்தி ஒன்றை கையாள இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.

அதன்படி ஸ்பாஞ்ச் குண்டுகளை பயன்படுத்த இஸ்ரேல் இராணுவம் முடிவு செய்துள்ளது.

ஸ்பாஞ்ச் குண்டுகள் என்பவை வெடிபொருட்கள் அல்ல. இவை இரு வகை இரசாயனங்கள் அடங்கிய சிறு பிளாஸ்டிக் கேன் வடிவில் இருக்கும்.

ஸ்பாஞ்ச் குண்டுகளை வீசியதும், அதில் இருந்து பொங்கி வரும் இரசாயன நுரை, சில விநாடிகளுக்குள் பெரியளவுக்கு பரவி, அந்த இடத்தையே கட்டி போன்ற தன்மையால் நிரப்பி விடும்.

இவற்றை சுரங்கத்தின் வாயில், அல்லது உள்ள பதுங்குக் குழிகளில் வீசினால், அதன் வழியாக ஹமாஸ் போராளிகள் வெளியே வந்து தாக்குதல் நடத்த முடியாது.

காசாவுக்குள் தற்போது வரை இஸ்ரேல் இராணுவம் முழுவதுமாக நுழையாததற்கான காரணங்களில் முக்கியமானது, ஹமாஸ் அமைத்துள்ள சுரங்கங்கள்.

காசாவில் சுமார் 20 ஆண்டுகள் கடுமையாக முயன்று பூமிக்குள் வலைப்பின்னல்களைப் போல ஹமாஸ் உருவாக்கி வைத்துள்ள சுரங்கங்களில் இருந்து போராளிகள் வெளியே வந்து எதிர்பாராத வகையில் திடீர் தாக்குதல் நடத்தினால் தங்கள் தரப்பில் பெரும் உயிர்ச் சேதம் ஏற்படும் என்பதே இஸ்ரேல் இராணுவனத்தின் தயக்கத்துக்குக் காரணம்.

2021-இல் 96 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஹமாஸின் சுரங்கங்களை அழித்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்திருந்தது. ஆனால், தங்கள் வசம் 483 கிலோ மீட்டர் அளவுக்கு சுரங்கங்கள் இருப்பதாகவும், இஸ்ரேல் அழித்தது 5 சதவீதம் கூட இல்லை எனவும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இதனால் ஹமாஸ் அமைப்பின் இந்த வியூகத்தை முறியடிக்க இஸ்ரேல் இராணுவம் அறிமுகப்படுத்தி இருக்கும் திட்டம் தான் ஸ்பாஞ்ச் குண்டுகள் எனப்படும் நவீன இரசாயன ஆயுதம்.

மிகவும் ஆபத்தான இரசாயனங்களைக் கொண்டு ஸ்பாஞ்ச் குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஸ்பாஞ்ச் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்தத் தொடங்கும் போது, காசா யுத்தம் புதிய பரிமாணத்துக்குச் செல்லக் கூடும் என இராணுவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...