tamilni 41 scaled
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் 37 கிராம மக்கள் படுகொலை

Share

நைஜீரியாவில் 37 கிராம மக்கள் படுகொலை

நைஜீரியாவில் உள்ள போகோஹராம் பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதல் ஒன்றில் 37 கிராம மக்கள் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கெய்டாம் மாவட்டம் குரோகயேயா கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முதலில் போகோஹராம் இயக்கத்தினர் துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்தையடுத்து அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து கிராம மக்கள் பலியானோர் உடல்களை அடக்கம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துச்சென்றபோது பயங்கரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலில் மேலும் 20 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த தாக்குதலையடுத்து அந்நாட்டு அரசு அவசர பாதுகாப்பு கூட்டத்தைக் கூட்டி தாக்குதல் நடந்த பகுதிக்கு அதிகாரிகள் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நைஜீரியாவின் வடகிழக்கு, வடமேற்கு, மத்திய பிராந்தியங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் அடிக்கடி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...