tamilni 26 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலின் அடுத்த கோரத் தாக்குதல்

Share

இஸ்ரேலின் அடுத்த கோரத் தாக்குதல்

ஜபாலியா அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது போர்க்குற்றம் என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜபாலியா அகதி முகாமில் இஸ்ரேல் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 195ஆக உயர்ந்துள்ளது என ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், 120 பேரை இன்னும் காணவில்லை என்றும், 777 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த அகதிகள் முகாம் மீதான இஸ்ரேலிய தாக்குதலால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

மேலும், அழிவின் அளவைக் கருத்தில் கொண்டு போர்க்குற்றங்களுக்கு சமமாக இதனை கருதுகிறோம் எனவும் ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, காசாவை சேர்ந்த ஆயிரம் குழந்தைகளுக்கு ஐக்கிய அரபு அமீரக வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்படும் என ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...