உலகம்செய்திகள்

ஜேர்மன் ரயில் நிலையம் ஒன்றில் பரபரப்பை ஏற்படுத்திய குண்டு: கமெராவில் சிக்கியுள்ள காட்சி

Share

ஜேர்மன் ரயில் நிலையம் ஒன்றில் பரபரப்பை ஏற்படுத்திய குண்டு: கமெராவில் சிக்கியுள்ள காட்சி

ஜேர்மன் ரயில் நிலையம் ஒன்றில் கையெறி குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம், ஜேர்மனியின் பிராங்க்பர்ட் ரயில் நிலையம் ஒன்றில் சந்தேகத்துக்குரிய ஒரு பொருள் கிடப்பதாக பயணிகள் பொலிசாருக்கு தகவலளித்ததைத் தொடர்ந்து, பொலிசார் அங்கு விரைந்துள்ளனர்.

சந்தேகத்துக்குரிய அந்த பொருள் ஒரு கையெறிகுண்டு என்பதும், அது பயன்பாட்டில் உள்ள ஒரு குண்டு என்பதும் தெரியவந்தது.

அந்த கையெறிகுண்டு வெடித்தால், 20 மீற்றர் சுற்றளவில் உள்ளவர்களை கொல்லக்கூடிய சக்தி வாய்ந்தது என ஜேர்மன் ஊடகமான Bild தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அந்த பகுதியிலிருந்த CCTV கமெராக்களில், செவ்வாய்க்கிழமை அதிகாலை, மாஸ்க் அணிந்த ஒருவர் கையெறிகுண்டு ஒன்றை விட்டுச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

அதிகாலை 4.18 மணிக்கு, ஆண் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் ரயில் நிலையத்தில் நடமாடுவதும், சிறிது நேரத்துக்குப் பின், அவர் கையெறிகுண்டு ஒன்றை கீழே வைத்துவிட்டு மெதுவாக அங்கிருந்து வெளியேறுவதும் கமெராவில் பதிவாகியுள்ளது.

தங்களுக்கு இந்த சம்பவம் குறித்து சில துப்புக்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், அவற்றின் அடிப்படையில் நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...