உலகம்செய்திகள்

ஜேர்மன் ரயில் நிலையம் ஒன்றில் பரபரப்பை ஏற்படுத்திய குண்டு: கமெராவில் சிக்கியுள்ள காட்சி

Share

ஜேர்மன் ரயில் நிலையம் ஒன்றில் பரபரப்பை ஏற்படுத்திய குண்டு: கமெராவில் சிக்கியுள்ள காட்சி

ஜேர்மன் ரயில் நிலையம் ஒன்றில் கையெறி குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம், ஜேர்மனியின் பிராங்க்பர்ட் ரயில் நிலையம் ஒன்றில் சந்தேகத்துக்குரிய ஒரு பொருள் கிடப்பதாக பயணிகள் பொலிசாருக்கு தகவலளித்ததைத் தொடர்ந்து, பொலிசார் அங்கு விரைந்துள்ளனர்.

சந்தேகத்துக்குரிய அந்த பொருள் ஒரு கையெறிகுண்டு என்பதும், அது பயன்பாட்டில் உள்ள ஒரு குண்டு என்பதும் தெரியவந்தது.

அந்த கையெறிகுண்டு வெடித்தால், 20 மீற்றர் சுற்றளவில் உள்ளவர்களை கொல்லக்கூடிய சக்தி வாய்ந்தது என ஜேர்மன் ஊடகமான Bild தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அந்த பகுதியிலிருந்த CCTV கமெராக்களில், செவ்வாய்க்கிழமை அதிகாலை, மாஸ்க் அணிந்த ஒருவர் கையெறிகுண்டு ஒன்றை விட்டுச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

அதிகாலை 4.18 மணிக்கு, ஆண் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் ரயில் நிலையத்தில் நடமாடுவதும், சிறிது நேரத்துக்குப் பின், அவர் கையெறிகுண்டு ஒன்றை கீழே வைத்துவிட்டு மெதுவாக அங்கிருந்து வெளியேறுவதும் கமெராவில் பதிவாகியுள்ளது.

தங்களுக்கு இந்த சம்பவம் குறித்து சில துப்புக்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், அவற்றின் அடிப்படையில் நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...