2 1 1 scaled
உலகம்செய்திகள்

இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன சிறார்களின் எண்ணிக்கை: நடுங்க வைக்கும் தரவுகள்

Share

இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன சிறார்களின் எண்ணிக்கை: நடுங்க வைக்கும் தரவுகள்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி 25 நாட்களில், இதுவரை 3,600க்கும் மேற்பட்ட பாலஸ்தீன சிறார்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

காஸாவின் சுகாதார அமைச்சரகம் வெளியிட்டுள்ள தகவலில், இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல், குறிதவறிய ராக்கெட்டுகள் மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி சிறார்கள் பலியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களில் பச்சிளம் குழந்தைகள், பிஞ்சு சிறுவர்கள், மாணவர்கள் என பல தரப்பினர் பலியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். காஸா பகுதியில் குடியிருக்கும் 2.3 மில்லியன் மக்களில் பாதி அளவுக்கு 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றே கூறப்படுகிறது.

இதில், சிறார்களில் 40 சதவீதம் பேர்கள் கடந்த 25 நாட்களில் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 26ம் திகதி வரையான தரவுகளின் அடிப்படையில் 12 வயதுக்கு உட்பட்ட 2001 சிறார்களும் 3 வயதும் அதற்கு உட்பட்ட சிறார்கள் 615 பேர்களும் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் ஹமாஸ் படைகளை மட்டுமே தாங்கள் குறிவைத்துள்ளதாகவும், ஹமாஸ் படைகள் அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்துவதாகவும் இஸ்ரேல் தரப்பு குற்றஞ்சாட்டி வருகிறது.

அத்துடன், இதுவரை ஹமாஸ் படைகளின் 500 ராக்கெட்டுகள் குறிதவறி காஸா பகுதியிலேயே விழுந்துள்ளதாகவும், அதில் பல ஆயிரம் பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி, கடந்த மூன்று ஆண்டுகளில் உலகில் நடந்த அனைத்து மோதல்களையும் விட, காஸாவில் மூன்று வாரங்களுக்குள் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றே கூறப்படுகிறது.

அதாவது, கடந்த ஆண்டு முழுவதும் இரண்டு டசின் போர் மண்டலங்களில் 2,985 குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் காசா பகுதியில் மட்டும் கடந்த 25 நாட்களில் 3,600க்கும் மேற்பட்ட பாலஸ்தீன சிறார்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...