rtjy 368 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம்: 12 000 பேரை வைத்தியசாலையை விட்டு வெளியேற்ற உத்தரவு

Share

இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம்: 12 ஆயிரம் பேரை வைத்தியசாலையை விட்டு வெளியேற்ற உத்தரவு

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் யுத்தம் 3 வாரங்களை தாண்டி நீடித்து வருகின்ற நிலையில் இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,400 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் கடுமையான தாக்குதல் நடத்தியதில் காசாவில் 3,324 குழந்தைகள் உள்பட 8ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை வான் மற்றும் கடல் வழியாக குண்டுகளை வீசி வந்த இஸ்ரேல் ராணுவ படையினர் தரை வழி தாக்குதலையும் நடத்தி வருகின்ற நிலையில் காசாவை முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல் படையினர் பீரங்கி வண்டிகளுடன் நகருக்குள் ஊடுருவி கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காசாவில் உள்ள மிகப்பெரிய வைத்தியசாலையில் ஹமாஸ் படையினர் தங்களின் இரகசிய தளம் அமைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியதோடு இது தொடர்பான சில புகைப்படங்களையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

இந்த வைத்தியசாலையில் உயிருக்கு பயந்து 12 ஆயிரம் பொதுமக்கள் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் வைத்தியசாலை அருகே உள்ள ஹமாஸ் இலக்குகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் போர் விமானங்கள் இங்கு தொடர்ந்து குண்டுகளை வீசி வருவதால் வைத்தியசாலையில் பதுங்கி இருக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளதோடு போர் தீவிரம் அடைந்துள்ளதால் 12 ஆயிரம் பேரையும் உடனடியாக வைத்தியசாலையில்இருந்து வெளியேறும்படி உத்தரவிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...