1 15 scaled
உலகம்செய்திகள்

19 ஆண்டுகளாக தலைமறைவாகியுள்ள இலங்கை நபர்: யார் இவர்?

Share

19 ஆண்டுகளாக தலைமறைவாகியுள்ள இலங்கை நபர்: யார் இவர்?

கள்ள நோட்டு வழக்கில் 19 ஆண்டுகளாக தலைமறைவாகியுள்ள இலங்கை நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை ராமானுஜம் தெரு பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்கிற கீதா அண்ணன் (வயது 56) என்பவர் இலங்கை அகதியாவார். இவர், செங்கல்பட்டு அகதிகள் முகாமில் வசித்து வந்தார்.

இவர், கடந்த 2000 -ம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது, இவருடன் சேர்த்து 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக திருச்சி சி.பி.சி.ஐ.டி. கள்ள நோட்டு தடுப்பு பிரிவு பொலிசார் ஆனந்த் உள்பட 9 பேரை கைது செய்ததையடுத்து, இந்த வழக்கு திருச்சி 2 -வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

பின்பு, கைதான ஆனந்த் ஜாமினில் வெளிவந்து இரண்டு முறை நீதிமன்றத்தில் ஆஜரானார். இதனையடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் நிலை வந்ததும் அவரை காணவில்லை.

அதாவது, 2004 பிப்ரவரி 6 -ம் திகதி முதல் ஆனந்த்தை காணவில்லை. இந்நிலையில், ஆனந்த் தொடர்பான வழக்கில் இதுவரை தீர்ப்பு வழங்கப்படவில்லை.

இதனால், 19 ஆண்டுகள் தலைமறைவாகி இருக்கும் ஆனந்ததை மீண்டும் சிபிசிஐடி பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், சென்னையில் உள்ள அவரது பெற்றோர் மற்றும் சகோதரி வீட்டுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...