இந்தியாஉலகம்செய்திகள்

கனடாவிற்கான விசா சேவை ஆரம்பித்த இந்தியா

rtjy 316 scaled
Share

கனடாவிற்கான விசா சேவை ஆரம்பித்த இந்தியா

கனடா நாட்டிற்கான விசா சேவையை இந்தியா மீண்டும் வழங்க ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .

கனடாவின் சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கடந்த ஜூன் மாதம் 18ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது கனடா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதன் காரணத்தினால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. அத்துடன் இரு நாடுகளும் தங்களது தூதரக அதிகாரிகளை உடனடியாக திரும்ப பெற்றுக் கொண்டனர்.

மேலும் கனடாவின் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த இந்தியா, கனடாவிற்கான விசா சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

இந்நிலையில், கனடா நாட்டிற்கான விசா சேவையை இந்தியா மீண்டும் வழங்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது..

இதன்மூலம் கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கான விசா சேவைகள் மீண்டும் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி வணிகம், மருத்துவம், உள்ளிட்டவை தொடர்பான விசா வழங்கும் சேவைகளும் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...