3 12 scaled
உலகம்செய்திகள்

இந்தியா கனடா உறவில் விரிசல் ஏற்பட்டாலும் இது மட்டும் குறையவில்லை…

Share

இந்தியா கனடா உறவில் விரிசல் ஏற்பட்டாலும் இது மட்டும் குறையவில்லை…

இந்தியா கனடா தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டாலும், கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயலும் இந்தியர்கள் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை.

கனேடியர் ஒருவர் கனடா மண்ணில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக செப்டம்பரில் கனேடிய பிரதமர் குற்றம் சாட்ட, இரு நாடுகளின் தூதரக உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஆனால், அதே செப்டம்பரில், கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்று பிடிபட்ட இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு, அதிகமாக இருந்ததாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு தரவுகள் தெரிவித்துள்ளன.

பல்வேறு வழிகள் வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற 8,076 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் 3,059 பேர், அல்லது 38% பேர், கனடா அமெரிக்க எல்லையில் கைது செய்யப்பட்டவர்கள்.

விடயம் என்னவென்றால், இதுவரை இப்படி அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையிலேயே, இதுதான் மிக அதிகமாகும்.

கனடாவில் குடியமர்ந்துள்ள பல இந்திய புலம்பெயர்வோர், குறிப்பாக குஜராத்தைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவுக்குள் நுழைய காத்திருந்திருக்கிறார்கள். 2023ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், 2,327 சட்டவிரோத புலம்பெயர்வோர் அமெரிக்காவுக்குள் கடத்தப்படும் முயற்சியின்போது பிடிபட்டுள்ளார்கள்.

செப்டம்பரில் இந்த எண்ணிக்கை 3,059ஆக உயர்ந்துள்ளது. அப்படி சிக்கியவர்களில், பெற்றோர் இல்லாமல் தனியாக வந்த பிள்ளைகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
13 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மொரட்டுவையில் திருமண நாளன்று இளைஞர் கொலை: மூவர் கைது!

மொரட்டுவை, வில்லோரவத்தை பகுதியில் கடந்த 3ஆம் திகதி இளைஞர் ஒருவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை...

12 11
செய்திகள்இந்தியா

கொச்சி துறைமுகத்தை வந்தடைந்த ஈரானிய போர்க்கப்பல்: கடல்சார் ஒத்துழைப்பில் புதிய மைல்கல்!

இந்தியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, ஈரானிய...

11 11
செய்திகள்அரசியல்இலங்கை

மத்திய கிழக்கு போர்ச் சூழல்: இலங்கையின் பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் சஜித் பிரேமதாசவின் 4 முக்கிய பரிந்துரைகள்!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தக்கூடிய...

09 11
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை ஊடாக இந்தியக் கப்பல்கள்: ஈரான் அனுமதி வழங்கியதாகத் தகவல்; ஆனால் டெஹ்ரான் மறுப்பு!

ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், இந்தியக் கொடியுடன் பயணிக்கும் எண்ணெய் கொள்கலன்களை (Oil...