tamilni Recovered 7 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் தாக்குதலை நான் நியாயப்படுத்தவில்லை: ஐ நா பொதுச்செயலாளர்

Share

ஹமாஸ் தாக்குதலை நான் நியாயப்படுத்தவில்லை: ஐ நா பொதுச்செயலாளர்

ஹமாஸ் தொடர்பான தன்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலிய ராணுவ படையினருக்கும் இடையே போர் தாக்குதலானது 3 வது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த போர் நடவடிக்கையில் மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கும், மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகள் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் போர் குறித்து தெரிவித்த கருத்து வைரலானது.

அதில், இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல் ஒரு எதிர்வினை தான் என அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

இதனால் இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவு தரப்பினர் மத்தியில் கடும் கோபத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் ஹமாஸ் தொடர்பான தன்னுடைய வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஹமாஸ் படையினரின் பயங்கரவாதத்தை தான் நியாயப்படுத்தவில்லை என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியான தகவல்கள் முழுவதும் பொய், உண்மையில் நான் எதிர் மாறான கருத்தை தான் கூறினேன் என்று ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்தாக பிபிசி குறிப்பிட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...