tamilni 305 scaled
உலகம்செய்திகள்

பாலஸ்தீன மக்களின் விதி இஸ்ரேல் கையில் இல்லை! அமைச்சர் ரியாத் அல் மலிக்கி காட்டம்

Share

பாலஸ்தீன மக்களின் விதி இஸ்ரேல் கையில் இல்லை! அமைச்சர் ரியாத் அல் மலிக்கி காட்டம்

பாலஸ்தீன மக்களின் தலைவிதி இஸ்ரேலின் கையில் இல்லை என அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாத் அல் மலிக்கி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஹமாஸ் போர் 18வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த போரில் மொத்தமாக 7000 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் நடந்த தாக்குதலில் இதுவரை 96 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் இந்தப் போரில் பலியானோர் எண்ணிக்கை 7,292 ஆக உயர்ந்துள்ளது. இதில் இஸ்ரேலில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 1,405 பேரும், காசா முனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5,791 பேரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில் பாலஸ்தீன மக்களின் விதி இஸ்ரேலின் கைகளில் இருக்க முடியாது என பாலஸ்தீனத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாத் அல் மலிக்கி தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாலஸ்தீனத்திற்கு எதிரான தாக்குதலை நிறுத்த ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் காசாவில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலானோர் பொதுமக்கள் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாத் அல் மலிக்கி குற்றம்சாட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...