164775 death 2 scaled
உலகம்செய்திகள்

நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுலா சென்ற போது நேர்ந்த சோகம்

Share

நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுலா சென்ற போது நேர்ந்த சோகம்

தமிழக மாவட்டம், கோவையில் நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றில் குளிக்க சென்ற போது ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆவில் சின்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் பிரதீப் பால்சாமி (37). இவர், கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்தார்.

இவர், தனது நண்பர்களான ஆல்வின் பிரபு, ஏசுதாஸ் மற்றும் மணிகண்டன் ஆகியோருடன் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று காடம்பாறை அணை பகுதிக்கு சுற்றுலா சென்றார்.

பிரதமர் வேட்பாளராக அண்ணாமலையை அறிவிக்க முடியுமா? சீமான் ஆதரவு
பிரதமர் வேட்பாளராக அண்ணாமலையை அறிவிக்க முடியுமா? சீமான் ஆதரவு
அணையில் நேர்ந்த சோகம்
இவர்கள் நான்கு பேரும் காடம்பாறை அணையில் உள்ள அப்பராளியார் ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது, பிரதீப் பால்சாமி குளித்துக் கொண்டிருக்கும் போது தண்னீரில் மூழ்கியுள்ளார்.

அதை பார்த்த அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால், ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்ததால் அவரை காப்பாற்ற முடியவில்லை. உடனே, காடம்பாறை காவல் நிலையத்திற்கு நண்பர்கள் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் பிரதீப் பால்சாமியின் உடலை தேட ஆரம்பித்தனர். அந்த பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் ஆனைமலை புலிகள் காப்பக வனத் துறையினர் உதவியுடன் தேடினர்.

சிறிது நேரத்திற்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது. பின்பு, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

images 4 3
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!

தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “திட்வா” (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த...