164775 death 2 scaled
உலகம்செய்திகள்

நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுலா சென்ற போது நேர்ந்த சோகம்

Share

நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுலா சென்ற போது நேர்ந்த சோகம்

தமிழக மாவட்டம், கோவையில் நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றில் குளிக்க சென்ற போது ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆவில் சின்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் பிரதீப் பால்சாமி (37). இவர், கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்தார்.

இவர், தனது நண்பர்களான ஆல்வின் பிரபு, ஏசுதாஸ் மற்றும் மணிகண்டன் ஆகியோருடன் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று காடம்பாறை அணை பகுதிக்கு சுற்றுலா சென்றார்.

பிரதமர் வேட்பாளராக அண்ணாமலையை அறிவிக்க முடியுமா? சீமான் ஆதரவு
பிரதமர் வேட்பாளராக அண்ணாமலையை அறிவிக்க முடியுமா? சீமான் ஆதரவு
அணையில் நேர்ந்த சோகம்
இவர்கள் நான்கு பேரும் காடம்பாறை அணையில் உள்ள அப்பராளியார் ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது, பிரதீப் பால்சாமி குளித்துக் கொண்டிருக்கும் போது தண்னீரில் மூழ்கியுள்ளார்.

அதை பார்த்த அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால், ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்ததால் அவரை காப்பாற்ற முடியவில்லை. உடனே, காடம்பாறை காவல் நிலையத்திற்கு நண்பர்கள் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் பிரதீப் பால்சாமியின் உடலை தேட ஆரம்பித்தனர். அந்த பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் ஆனைமலை புலிகள் காப்பக வனத் துறையினர் உதவியுடன் தேடினர்.

சிறிது நேரத்திற்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது. பின்பு, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...