tamilni 257 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் அமைப்பினால் விடுவிக்கப்பட்ட அமெரிக்க பிணைக்கைதிகள்

Share

ஹமாஸ் அமைப்பினால் விடுவிக்கப்பட்ட அமெரிக்க பிணைக்கைதிகள்

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளதோடு பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றவர்களில் சிலரை கொலை செய்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினர் நேற்று (20.10.2023) பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த இருவரை விடுதலை செய்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த தாய் மற்றும் இளம் வயது மகள் என கூறியுள்ளது.

மேலும், இருவரிடமும் ஜோ பைடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

ஹமாஸ் பிணைக்கைதிகள் இருவரை விடுதலை செய்த போதிலும், காசாவின் மத்திய பகுதியில் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்ய கத்தார், இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்து, அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...