அதிர்ச்சியை உருவாக்கிய காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் : ஜேர்மன் சேன்ஸலர்
காசா பகுதியிலுள்ள, அல்-அஹ்லி அரபி பாப்டிஸ்ட் மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இந்த சம்பவத்துக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.
இந்நிலையில், காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த காட்சிகள் தனக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார்.
அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்லார்கள், காயமடைந்துள்ளார்கள் என்று கூறியுள்ள ஷோல்ஸ், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படுவது அவசியமாகும் என்றும் கூறியுள்ளார் அவர்.
Comments are closed.