3 6 scaled
உலகம்செய்திகள்

சுவிஸ் பள்ளி ஒன்றை திடீரென சுற்றி வளைத்த பொலிசார்: அதிர்ச்சியில் மாணவர்கள்

Share

சுவிஸ் பள்ளி ஒன்றை திடீரென சுற்றி வளைத்த பொலிசார்: அதிர்ச்சியில் மாணவர்கள்

சுவிட்சர்லாந்திலுள்ள தொழிற்பயிற்சிப் பள்ளி ஒன்றை திடீரென பொலிசாரும் தீயணைப்புக் குழுவினரும் சுற்றி வளைத்ததால், மாணவ மாணவியர் அதிர்ச்சியில் உறைந்த சம்பவம் ஒன்று நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெனீவாவிலுள்ள Carouge என்னுமிடத்திலுள்ள தொழிற்பயிற்சிப் பள்ளி ஒன்றிற்கு நேற்று காலை துப்பாக்கியுடன் ஒருவர் நடமாடுவது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

உடனடியாக, மாணவ மாணவியர் கதவுகளை உட்புறமாக பூட்டிக்கொண்டு பெஞ்ச்களின் கீழே பதுங்கிக்கொண்டனர்.

உடனடியாக ஆயுதம் ஏந்திய பொலிசாரும், தீயணைப்புக் குழுவினரும் பள்ளியை சுற்றி வளைத்துள்ளனர். ஆனால், பள்ளியில் மேற்கொண்டதீவிர சோதனையில் யாரும் சிக்கவில்லை.

அதைத் தொடர்ந்து, 350 மாணவ மாணவியரும் பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அதிர்ச்சியடைந்த மூன்று மாணவ மாணவியருக்கு மட்டும் மன நல ஆலோசகர்கள் ஆலோசனை அளிக்க வேண்டியதாயிருந்தது.

அது ஒருவேளை போலியான மிரட்டலாக இருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...