tamilni 193 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்ட பெண்ணிடம் வாடகை கேட்ட இஸ்ரேலிய உரிமையாளர்

Share

ஹமாஸ் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்ட பெண்ணிடம் வாடகை கேட்ட இஸ்ரேலிய உரிமையாளர்

ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட இளம்பெண் ஒருவரின் வீட்டு உரிமையாளர், அவருடன் வசித்து வரும் நண்பரிடம் வாடகை கேட்டது சர்ச்சையாகியுள்ளது.

இஸ்ரேல் காசா மீது தீவிரமாக தாக்குதல் நடத்தி வருவதோடு, வான்வழித்தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை கூறியுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலில் தங்கி படித்து வந்த இன்பர் ஹைமன் என்ற இளம்பெண், ஹமாஸ் அமைப்பினரால் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது ஆண் நண்பரான நோம் அல்லானுடன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்துள்ளார்.

இன்பர் பிணைக்கைதியாக பிடிபட்டதால் அவரால் கடந்த மாதத்திற்கான வாடகையை செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால், அவரின் வீட்டின் உரிமையாளர் வாடகையை செலுத்துமாறு இன்பரின் நண்பருக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.

மேலும், நடந்த விடயத்தை நோம் விளக்கியபோதும், அதனை ஏற்க மறுத்த உரிமையாளர் நீங்கள் 2,500 ஷேக்கில் (இஸ்ரேல் பணம்) தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த உரையாடலை நோம் அல்லானின் தந்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் வீட்டு உரிமையாளர் மன்னிப்பு கேட்க நேரம் வேண்டும் என்பதற்காக நான் அவரது பெயரையும், தொலைப்பேசி எண்ணையும் பதிவிடவில்லை என்றும் கூறியுள்ளார்.

குறித்த விடயத்தை வீட்டின் உரிமையாளர் மறுத்துள்ளதோடு, அப்பெண்ணின் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.

அவர் பத்திரமாக இஸ்ரேல் திரும்ப வேண்டும் என்றே அவர்களது பெற்றோரை போல நானும் விரும்புகிறேன் என உரிமையாளர் கூறியதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
உலகம்செய்திகள்

126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’ விற்பனைக்கு வருகிறது: பல மில்லியன் பவுண்டுகள் விலை!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’...

b7e08360 48da 11f0 beef ebd92399e8ec.jpg
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: மேற்குக் கரையில் இளைஞர் சுட்டுக்கொலை; காசாவிலும் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால்...

1.1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...

l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....