5 6 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: கொல்லப்பட்ட அமெரிக்க குடிமக்கள்

Share

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: கொல்லப்பட்ட அமெரிக்க குடிமக்கள்

இஸ்ரேல்-ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போரில் இதுவரை 22 அமெரிக்கர்கள் கொலை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6வது நாளாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடுமையான போர் இன்றும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காசாவின் எல்லைப் பகுதியில் இசை திருவிழா நடைபெற்று கொண்டு இருக்கும் போது ஹமாஸ் அமைப்பினர் தங்கள் தாக்குதலை திடீரென தொடங்கினர்.

இந்த இசை திருவிழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு இருந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் ஜெர்மனியர்கள், அமெரிக்கர்கள் என பல நாடுகளை சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர்.

பலரை ஹமாஸ் அமைப்பினர் தங்களது பிணைக் கைதிகளாக பிடித்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் ஹமாஸ்-இஸ்ரேல் போரில் உயிரிழந்த அமெரிக்க நாட்டு மக்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது என புதன்கிழமை அந்த நாட்டின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்த தகவலில், இதுவரை நடந்த மோதலில் குறைந்தபட்சமாக 22 அமெரிக்க குடிமக்கள் கொல்லப்பட்டு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
11 13
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் விடயத்தில் ட்ரம்பை நிராகரித்த மோடி

காஷ்மீர் விடயத்தில் எந்தவொரு நாடும் மத்தியஸ்தராக செயற்படுவதை நாம் விரும்பவில்லை என இந்திய பிரதமர் நரேந்திர...

12 14
இலங்கைசெய்திகள்

மின்கட்டணத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முயற்சி: சஜித்தின் வேண்டுகோள்

மின் கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சியைக் கைவிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். இது...

13 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஊழலால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான்

இலங்கையில், ஜப்பான் நிறுவனங்கள், ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை அரசாங்கம் இந்தப் பிரச்சினையைச் சமாளிக்கும் என்று தாம்...

15 13
உலகம்செய்திகள்

கனடாவில் வேலை இழப்பு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

கனடாவின் (Canada) வேலையின்மை வீதம் ஏப்ரல் மாதத்தில் 6.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி...