1 2 scaled
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் பாலஸ்தீன ஆயுதக்குழு ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

Share

ஜேர்மனியில் பாலஸ்தீன ஆயுதக்குழு ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீன ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தியதை, ஜேர்மன் தலைநகர் பெர்லினில் கொண்டாடியவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் திடீர் தாக்குதல் நடத்திய நிலையில், பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான அமைப்பு ஒன்று, ஜேர்மன் தலைநகர் பெர்லினில் வழிப்போக்கர்களுக்கு இனிப்புகளை வழங்கியுள்ளது.

அந்தக் குழு, தனது சமூக ஊடக சேனல்களில், பாலஸ்தீன மக்களின் எதிர்ப்பு வாழ்க என்று பதிவிட்டுள்ளது.

பெர்லினில் பாலஸ்தீனிய சமூகத்தினர் அதிகம் வாழும் Sonnenallee என்னும் இடத்தில், சுமார் 40 நபர்கள் கூடி, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் குறித்து தடை செய்யப்பட்ட கோஷங்கள் எழுப்பியதாகக் கூறப்படும் நிலையில், அவர்களில் பலரைப் பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவங்களின்போது இரண்டு பொலிசார் காயமடைந்தனர்.

இதற்கிடையில், இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, இரண்டு ஜேர்மானியர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டுள்ளதாகக் கருதப்படுவதுடன், குறைந்தது ஒரு ஜேர்மானியராவது கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...