6 31 scaled
உலகம்செய்திகள்

அடுத்த ஆண்டு ரிஷி கட்சியினரை பிரதமர் இல்லத்திலிருந்து வெளியேற்றிவிடுவோம்: எதிர்க்கட்சியினர் உற்சாகம்

Share

அடுத்த ஆண்டு ரிஷி கட்சியினரை பிரதமர் இல்லத்திலிருந்து வெளியேற்றிவிடுவோம்: எதிர்க்கட்சியினர் உற்சாகம்

ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி, எதிர்க்கட்சியினரை பெரும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

ஸ்கொட்லாந்தின் Rutherglen and Hamilton West தோகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், லேபர் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. லேபர் கட்சி வேட்பாளரான Michael Shanks 17,845 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இது ஸ்கொட்லாந்தின் பெரிய கட்சியான SNP கட்சியின் வேட்பாளரான Katy Loudonஐ விட 9,446 வாக்குகள் அதிகமாகும்.

இந்த வெற்றி, வரும் பொதுத்தேர்தலின் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது என்பதால், இதே நிலை பொதுத்தேர்தலிலும் நீடிக்குமானால், லேபர் கட்சி, பிரதமர் பதவியை பிடிப்பதற்கு அது வழிவகை செய்யக்கூடும் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையில், லேபர் கட்சியின் தலைவரான Sir Keir Starmer, லேபர் கட்சியால் அடுத்த ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியினரை பிரதமர் இல்லத்திலிருந்து வெளியேற்றி, மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மாற்றத்தை நாட்டில் கொண்டுவரமுடியும், இன்று அந்த பயணத்தின் ஒரு பகுதியை நாம் காண்கிறோம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...

25 6939a5588b95b
இலங்கைசெய்திகள்

மூன்றாம் தவணையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைமை இல்லை: பரீட்சைகள் இரத்து!

இந்த ஆண்டு மூன்றாம் தவணை முடிவில் பாடசாலை மாணவர்களுக்கு எந்த விதத்திலும் மதிப்பெண் வழங்கும் முறைமை...

images 5 4
இந்தியாசெய்திகள்

13 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

தமிழகத்தின் தூத்துக்குடியில் 2012ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு...