5 25 scaled
உலகம்செய்திகள்

புலம்பெயர்தலை நிறுத்துங்கள் என்று சுவிஸ் மக்கள் சொல்லும் நிலை உருவாகலாம்

Share

புலம்பெயர்தலை நிறுத்துங்கள் என்று சுவிஸ் மக்கள் சொல்லும் நிலை உருவாகலாம்

புலம்பெயர்தலை நிறுத்துங்கள் என்று சுவிஸ் மக்கள் சொல்லும் ஒரு நிலை உருவாகலாம் என சுவிஸ் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சுவிஸ் முன்னாள் ஜனாதிபதியும், ஆளும் சுவிஸ் பெடரல் கவுன்சில் உறுப்பினருமான Guy Parmelin, புலம்பெயர்தலை நிறுத்துங்கள் என்று சுவிஸ் மக்கள் சொல்லும் ஒரு நிலை உருவாகலாம் என்று கூறியுள்ளார்.

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றொரு பழமொழி உண்டு. அதுபோல, உலக நாடுகள் பல திறன்மிகுப் பணியாளர் தட்டுப்பாட்டால் அவதியுற்று வருகின்றன. அதே நேரத்தில், புலம்பெயர்வோர் தங்கள் நாடுகளுக்கு வருவதை அவை ஏற்க மறுக்கின்றன.

சுவிட்சர்லாந்திலும் அந்த நிலை காணப்படுகிறது. பல துறைகளுக்கு திறன்மிகுப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், புலம்பெயர்தலை மக்கள் எதிர்க்கிறார்கள்.

சுவிஸ் மக்களின் பிரதிநிதியாக, அவர்களுடைய எண்ணங்களைத்தான் தற்போது வெளிப்படுத்தியுள்ளார் Guy Parmelin.

இப்படியே புலம்பெயர்தல் தொடரமுடியாது என்று கூறியுள்ள அவர், சுவிட்சர்லாந்தில் வீடுகள் பற்றாக்குறைக்கு பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர்தான் காரணம் என்கிறார்.

புலம்பெயர்தல், திறன்மிகுப் பணியாளர்கள் தட்டுப்பாட்டை தீர்க்க உதவுகிறது. ஆனால், இப்படியே தொடரமுடியுமா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது என்று கூறும் Guy Parmelin, ஒரு கட்டத்தில் சுவிஸ் மக்கள், புலம்பெயர்தல் போதும் என கூறுவார்கள் என தன்னால் உறுதியாகக் கூறமுடியும் என்கிறார்.

Share
தொடர்புடையது
image 2b35ae96f8
இலங்கைசெய்திகள்

இந்திய விசா, கடவுச்சீட்டு சேவைகள் இனி நேரடியாக! – நவம்பர் 3 முதல் உயர்ஸ்தானிகராலயங்கள் மூலம் சேவை

எதிர்வரும் 03ஆம் திகதி முதல் இந்தியாவிற்கான விசா, கடவுச்சீட்டு மற்றும் அனைத்து தூதரக சேவைகளும் இந்திய...

25 6903096ee28d6
உலகம்செய்திகள்

அணு ஆயுத சோதனை களத்தில் அமெரிக்கா: ட்ரம்பின் அதிரடி முடிவு உலகிற்கு எச்சரிக்கை

அமெரிக்க அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்குமாறு அநாட்டு இராணுவத் தலைவர்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...

images 4 3
இலங்கைசெய்திகள்

கடலில் மிதந்துவந்த திரவம் 2 மீனவர்கள் உயிரிழப்பு

கடலில் மிதந்து வந்த ஒரு போத்தலில் (புட்டியில்) இருந்த திரவத்தை அருந்திய நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த...

25 6902f64dd2465
இலங்கைசெய்திகள்

அடையாளம் தெரியாத சடலங்கள் மீட்பு: பொலிஸ் தீவிர விசாரணை

  இலங்கையின் மட்டக்குளி மற்றும் பமுனுகம காவல் நிலையங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், அடையாளம் தெரியாத...