உலகம்செய்திகள்

புலம்பெயர்தலை நிறுத்துங்கள் என்று சுவிஸ் மக்கள் சொல்லும் நிலை உருவாகலாம்

Share
5 25 scaled
Share

புலம்பெயர்தலை நிறுத்துங்கள் என்று சுவிஸ் மக்கள் சொல்லும் நிலை உருவாகலாம்

புலம்பெயர்தலை நிறுத்துங்கள் என்று சுவிஸ் மக்கள் சொல்லும் ஒரு நிலை உருவாகலாம் என சுவிஸ் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சுவிஸ் முன்னாள் ஜனாதிபதியும், ஆளும் சுவிஸ் பெடரல் கவுன்சில் உறுப்பினருமான Guy Parmelin, புலம்பெயர்தலை நிறுத்துங்கள் என்று சுவிஸ் மக்கள் சொல்லும் ஒரு நிலை உருவாகலாம் என்று கூறியுள்ளார்.

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றொரு பழமொழி உண்டு. அதுபோல, உலக நாடுகள் பல திறன்மிகுப் பணியாளர் தட்டுப்பாட்டால் அவதியுற்று வருகின்றன. அதே நேரத்தில், புலம்பெயர்வோர் தங்கள் நாடுகளுக்கு வருவதை அவை ஏற்க மறுக்கின்றன.

சுவிட்சர்லாந்திலும் அந்த நிலை காணப்படுகிறது. பல துறைகளுக்கு திறன்மிகுப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், புலம்பெயர்தலை மக்கள் எதிர்க்கிறார்கள்.

சுவிஸ் மக்களின் பிரதிநிதியாக, அவர்களுடைய எண்ணங்களைத்தான் தற்போது வெளிப்படுத்தியுள்ளார் Guy Parmelin.

இப்படியே புலம்பெயர்தல் தொடரமுடியாது என்று கூறியுள்ள அவர், சுவிட்சர்லாந்தில் வீடுகள் பற்றாக்குறைக்கு பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர்தான் காரணம் என்கிறார்.

புலம்பெயர்தல், திறன்மிகுப் பணியாளர்கள் தட்டுப்பாட்டை தீர்க்க உதவுகிறது. ஆனால், இப்படியே தொடரமுடியுமா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது என்று கூறும் Guy Parmelin, ஒரு கட்டத்தில் சுவிஸ் மக்கள், புலம்பெயர்தல் போதும் என கூறுவார்கள் என தன்னால் உறுதியாகக் கூறமுடியும் என்கிறார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...