1 scaled
உலகம்செய்திகள்

தொடர் கனமழை மற்றும் மின்னல்: 8 பேர் பரிதாபமாக மரணம்

Share

இந்திய மாநிலம் ஜார்கண்டில் பெய்துவரும் கனமழை மற்றும் மின்னல் தாக்குவதாலும் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை முதல் ஜார்கண்ட் மாநிலத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சாலைகள் சிறிய பாலங்கள் ஆகியவை சேதமடைந்துள்ளன.

இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக பொதுமக்கள் திறந்தவெளியில் நிற்க வேண்டாம் எனவும், மரங்களின் அடியில் நிற்க வேண்டாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும், மழைநீர் தேங்கக்கூடிய இடங்களில் வசிப்போர் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், ராஞ்சியின் லால்பூர் பகுதியில் நிரம்பி வழிந்த சாக்கடையில் விழுந்து பிரசாத் (எ) சோட்டு என்பவர் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவரின் உடலானது இரண்டரை கிலோமீட்டர் தூரத்தில் கண்டறியப்பட்டது.

மேலும், பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கடந்த 24 மணிநேரத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
23 6535db6a64ba7
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலையால் இலங்கையில் 5 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாதிப்பு – ஐக்கிய நாடுகள் சபை கவலை!

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் சுமார் 527,000 சிறுவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக...

articles2FRGAP8jR5fJmot12PYdxp
செய்திகள்இலங்கை

62 பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு நியமனம்: வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தூரப்பகுதிகளுக்கு முன்னுரிமை!

இலங்கை சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 62 புதிய பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்கள்...

25 6950d161858e7
செய்திகள்உலகம்

சீனக் கிராமத்தில் வினோத சட்டம்: வெளியூர் திருமணம் மற்றும் குடும்பச் சண்டைகளுக்குப் பாரிய அபராதம்!

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லிங்காங் (Lincang) மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம், திருமணம்...

FB IMG 1764515922146 818x490 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளி பாதிப்பு: 79 சதவீத தொடருந்து மார்க்க புனரமைப்புப் பணிகள் நிறைவு!

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட தொடருந்து மார்க்கங்களில் 79 சதவீதமான...