3 scaled
உலகம்செய்திகள்

எதிர்க்கட்சியினரை கொலை செய்த பெலாரஸ் நாட்டு கூலிப்படை உறுப்பினர்

Share

எதிர்க்கட்சியினரை கொலை செய்த பெலாரஸ் நாட்டு கூலிப்படை உறுப்பினர்

பெலாரஸ் ஜனாதிபதியின் கூலிப்படையில் உறுப்பினராக இருந்த ஒருவர் மீது சுவிட்சர்லாந்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், அவரை சுவிஸ் நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்துவிட்டது.

சில நாடுகளில், ஆட்சியாளரை எதிர்த்துக் கேள்வி கேட்டால் கொலை செய்யும் பயங்கரம் இன்றும் காணப்படுகிறது. அவ்வகையில், பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதியான Alexander Lukashenkoவின் கூலிப்படையினராகிய ஒருவர் மீது சுவிட்சர்லாந்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவந்தது.

1999ஆம் ஆண்டு, பெலாரஸ் நாட்டின் எதிர்க்கட்சியினர் மூன்று பேரை கடத்தி கொலை செய்த விவகாரத்தில் பங்கிருப்பதாக Yuri மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை Yuri ஒப்புக்கொண்டிருந்தார். தன் நாட்டிலிருந்து தப்பி வெளியேறிய பின் சுவிட்சர்லாந்தின் St.Gallen மாகாணத்தில் 2018ஆம் ஆண்டு முதல் வாழ்ந்துவருகிறார் அவர். அவர் சுவிட்சர்லாந்தில் வாழ்வதாலேயே, அவர் மீது சுவிட்சர்லாந்தில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.

தான் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து பேச ஒப்புக்கொண்டதையடுத்து பெலாரஸில் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூறி, சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியிருந்தார் Yuri.

Yuriக்கு, ஒன்று முதல் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராதவிதமாக சுவிஸ் நீதிமன்றம் அவரை விடுவித்துவிட்டது.

மூன்று அரசியல்வாதிகள் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் தனக்கு தொடர்பு இருந்தாலும், கொலையாளி தான் அல்ல என்று கூறியிருந்தார் Yuri.

இந்நிலையில், Yuriயின் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக இருப்பதாகக் கூறி அவரை விடுவித்துவிட்டார் வழக்கை விசாரித்துவந்த சுவிஸ் நீதிபதி.

இந்த தீர்ப்பு, தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தையளித்துள்ளதாக, கொல்லப்பட்டவர்களின் பிள்ளைகள் தெரிவித்துள்ளார்கள்.

Share
தொடர்புடையது
b08a9d50370cb3acf536546f5c0646b0 1
செய்திகள்இலங்கை

இந்தியா-இலங்கை இடையே புதிய கப்பல் பாதை: ராமேஸ்வரம் – தலைமன்னார் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே, ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையேயான புதிய கப்பல் பாதையை ஆரம்பிப்பது குறித்து...

25 69005c8fb83eb
செய்திகள்இந்தியா

விசேட சோதனை: 2025ல் இதுவரை 2,097 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன – பொலிஸார் தகவல்

இந்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி...

25 69002cc98d286
செய்திகள்இலங்கை

கொழும்பு நிலப் பதிவேடு: அதிகாரப்பூர்வ கோப்பில் இருந்த கடிதம் மாயம் – விசாரணைக்கு நீதிவான் உத்தரவு

கொழும்பு நிலப் பதிவேட்டின் அதிகாரப்பூர்வ கோப்பில் இருந்த ஒரு கடிதம் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம்...

25 68fc59844d405
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தி வழக்கில் வடக்கு மாகாணத்தில் தீவிர விசாரணை: முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் கைது

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட இஷாரா செவ்வந்தி நாட்டில் தலைமறைவாகவும், வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லவும் உதவிய நபர்கள்...