3 scaled
உலகம்செய்திகள்

எதிர்க்கட்சியினரை கொலை செய்த பெலாரஸ் நாட்டு கூலிப்படை உறுப்பினர்

Share

எதிர்க்கட்சியினரை கொலை செய்த பெலாரஸ் நாட்டு கூலிப்படை உறுப்பினர்

பெலாரஸ் ஜனாதிபதியின் கூலிப்படையில் உறுப்பினராக இருந்த ஒருவர் மீது சுவிட்சர்லாந்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், அவரை சுவிஸ் நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்துவிட்டது.

சில நாடுகளில், ஆட்சியாளரை எதிர்த்துக் கேள்வி கேட்டால் கொலை செய்யும் பயங்கரம் இன்றும் காணப்படுகிறது. அவ்வகையில், பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதியான Alexander Lukashenkoவின் கூலிப்படையினராகிய ஒருவர் மீது சுவிட்சர்லாந்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவந்தது.

1999ஆம் ஆண்டு, பெலாரஸ் நாட்டின் எதிர்க்கட்சியினர் மூன்று பேரை கடத்தி கொலை செய்த விவகாரத்தில் பங்கிருப்பதாக Yuri மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை Yuri ஒப்புக்கொண்டிருந்தார். தன் நாட்டிலிருந்து தப்பி வெளியேறிய பின் சுவிட்சர்லாந்தின் St.Gallen மாகாணத்தில் 2018ஆம் ஆண்டு முதல் வாழ்ந்துவருகிறார் அவர். அவர் சுவிட்சர்லாந்தில் வாழ்வதாலேயே, அவர் மீது சுவிட்சர்லாந்தில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.

தான் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து பேச ஒப்புக்கொண்டதையடுத்து பெலாரஸில் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூறி, சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியிருந்தார் Yuri.

Yuriக்கு, ஒன்று முதல் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராதவிதமாக சுவிஸ் நீதிமன்றம் அவரை விடுவித்துவிட்டது.

மூன்று அரசியல்வாதிகள் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் தனக்கு தொடர்பு இருந்தாலும், கொலையாளி தான் அல்ல என்று கூறியிருந்தார் Yuri.

இந்நிலையில், Yuriயின் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக இருப்பதாகக் கூறி அவரை விடுவித்துவிட்டார் வழக்கை விசாரித்துவந்த சுவிஸ் நீதிபதி.

இந்த தீர்ப்பு, தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தையளித்துள்ளதாக, கொல்லப்பட்டவர்களின் பிள்ளைகள் தெரிவித்துள்ளார்கள்.

Share
தொடர்புடையது
000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...

images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம்...

images 2
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா...

dinamani 2025 11 28 gas8xazv AP25332344411320 750x430 1
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் புயல் வெள்ளப் பலி 631 ஆக உயர்வு: மீட்புப் பணிகள் தொடர்கின்றன!

இந்தோனேஷியாவின் அசேப் மாகாணம் மற்றும் சுமத்ரா தீவில் கடந்த வாரம் ஏற்பட்ட புயல்கள் மற்றும் கடும்...