5 24 scaled
உலகம்செய்திகள்

ஆயுதமேந்திய குழு ஒன்றின் வெறிச்செயல்…  சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்கள்

Share

மெக்சிகோ நாட்டின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில் இருந்து கடத்தப்பட்ட இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வார இறுதி நாட்களை கொண்டாடும் பொருட்டு, பண்ணை ஒன்றில் 7 நண்பர்கள் ஒன்று கூடியுள்ளனர். 14 முதல் 18 வயதுடைய இந்த 7 பேர்களும் குடும்ப உறுப்பினர்கள் எவருமின்றி தனியாகவே சென்றுள்ளனர்.

இந்த நிலையில் பல்வேறு வாகனங்களில் ஆயுததாரிகளான நபர்கள் அந்த பண்ணைக்குள் ஞாயிறன்று அதிகாலை சுமார் 4 மணிக்கு அத்துமீறி நுழைந்துள்ளனர். அந்த குழுவால் கடத்தப்பட்ட இளைஞர்களின் சடலம் மட்டுமே பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவமானது மெக்சிகோவின் Zacatecas மாகாணத்தில் நடந்துள்ளது. இதில் 6 இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட, ஒருவர் குற்றுயிரான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

அதிகாரிகள் இதுவரையில் அந்த இளைஞர்களின் சடலங்களை அடையாளம் காணாத நிலையில், அரசாங்கம் தரப்பில் அவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இளைஞர்கள் கடத்தப்பட்ட தகவல் வெளியானதும் 300 ராணுவத்தினர் உட்பட மிகப்பெரிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தற்போது சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்து தலைநகருக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இதனிடையே, இளைஞர்கள் மாயமான தகவலை அடுத்து தொடர்புடைய குடும்பங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், செவ்வாய்க்கிழமை பிரதான சாலையை அவர்கள் முடக்கியுள்ளனர்.

இந்த கடத்தல் மற்றும் படுகொலைக்கு நோக்கம் என்ன என்பது தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை. Zacatecas மாகாணம் மெக்சிகோ நாட்டிலேயே மிக அதிக வன்முறை சம்பவங்களுக்கு பெயர் போனது என்றே கூறுகின்றனர்.

இந்த 9 மாதங்களில் மட்டும் இதுவரை 500 பேர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...