1 17 scaled
உலகம்செய்திகள்

எனது எதிரிகளால் ஒரு கல்லறையை நிரப்புவேன் என்ற இத்தாலியர் கோமாவில் மரணம்

Share

எனது எதிரிகளால் ஒரு கல்லறையை நிரப்புவேன் என்ற இத்தாலியர் கோமாவில் மரணம்

இத்தாலியின் மிகவும் தேடப்பட்ட மாஃபியா தலைவன் கைதான நிலையில், தற்போது மருத்துவமனையில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலியின் மிகவும் கொடூரமான Cosa Nostra என்ற மாஃபியா குழுவுக்கு தலைவனான Matteo Messina Denaro என்பவரே மரணமடைந்ததாக கூறப்படுகிறது. சுமார் 30 ஆண்டுகள் பொலிசாருக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர், கடந்த ஜனவரி மாதம் பொலிசாரிடம் சிக்கினார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டைருந்த இவர், கடந்த மாதம் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இத்தாலியின் பல எண்ணிக்கையிலான கொலைகளுக்கு முதன்மை காரணம் டெனாரோ என்பவர் என்றே நம்பப்படுகிறது.

2002ல் இவர் மீதான கொலை வழக்குகள் விசாரிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமலே ஆயுள் தண்டனைக்கு விதிக்கப்பட்டார். தமது எதிரிகளால் ஒரு கல்லறையை நிரப்புவேன் என முன்னர் ஒருமுறை இவர் குறிப்பிட்டது, இத்தாலியில் பரவலாக பேசப்பட்டது.

1993ல் இருந்தே தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர், அதன் பின்னர் தமது சகாக்களால் மாஃபியா தொழிலை முன்னெடுத்து வந்துள்ளார். வெள்ளிக்கிழமை கோமா நிலைக்கு சென்றதை அடுத்து தற்போது மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தீவிரமான சிகிச்சை ஏதும் முன்னெடுக்க வேண்டாம் என டெனாரோ கோரிக்கை வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...