உலகம்செய்திகள்

எனது எதிரிகளால் ஒரு கல்லறையை நிரப்புவேன் என்ற இத்தாலியர் கோமாவில் மரணம்

1 17 scaled
Share

எனது எதிரிகளால் ஒரு கல்லறையை நிரப்புவேன் என்ற இத்தாலியர் கோமாவில் மரணம்

இத்தாலியின் மிகவும் தேடப்பட்ட மாஃபியா தலைவன் கைதான நிலையில், தற்போது மருத்துவமனையில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலியின் மிகவும் கொடூரமான Cosa Nostra என்ற மாஃபியா குழுவுக்கு தலைவனான Matteo Messina Denaro என்பவரே மரணமடைந்ததாக கூறப்படுகிறது. சுமார் 30 ஆண்டுகள் பொலிசாருக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர், கடந்த ஜனவரி மாதம் பொலிசாரிடம் சிக்கினார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டைருந்த இவர், கடந்த மாதம் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இத்தாலியின் பல எண்ணிக்கையிலான கொலைகளுக்கு முதன்மை காரணம் டெனாரோ என்பவர் என்றே நம்பப்படுகிறது.

2002ல் இவர் மீதான கொலை வழக்குகள் விசாரிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமலே ஆயுள் தண்டனைக்கு விதிக்கப்பட்டார். தமது எதிரிகளால் ஒரு கல்லறையை நிரப்புவேன் என முன்னர் ஒருமுறை இவர் குறிப்பிட்டது, இத்தாலியில் பரவலாக பேசப்பட்டது.

1993ல் இருந்தே தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர், அதன் பின்னர் தமது சகாக்களால் மாஃபியா தொழிலை முன்னெடுத்து வந்துள்ளார். வெள்ளிக்கிழமை கோமா நிலைக்கு சென்றதை அடுத்து தற்போது மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தீவிரமான சிகிச்சை ஏதும் முன்னெடுக்க வேண்டாம் என டெனாரோ கோரிக்கை வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

Share
Related Articles
23 4
உலகம்செய்திகள்

பிரான்ஸ் குடியுரிமை விதிகளை கடுமையாக்க உத்தரவிட்ட அமைச்சர்: சாடியுள்ள மனித உரிமைகள் அமைப்பு

பிரான்ஸ் உள்துறை அமைச்சர், குடியுரிமை விதிகளை கடுமையாக்குமாறு தனது அமைச்சக மற்றும் துறைசார் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்....

21 5
உலகம்செய்திகள்

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி

பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம்...

24 3
உலகம்செய்திகள்

அப்பாவிகளை கொன்ற பயங்கரவாதிகளுக்கு தண்டனை கொடுத்துள்ளோம்! இந்திய பாதுகாப்புத்துறை

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் உரிமையை இந்தியா பயன்படுத்தியிருக்கிறது என பாதுகாப்புத்துறை...

26 3
உலகம்செய்திகள்

3 வருடங்கள் போன் பயன்படுத்தாமல் SSC-ல் தேர்ச்சி பேற்று , பின்னர் UPSC-ல் தேர்ச்சி பெற்ற இளம் அதிகாரி யார்?

3 வருடங்கள் தொலைபேசியைப் பயன்படுத்தாமல் எஸ்எஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் 24 வயதில் யுபிஎஸ்சியில்...