உலகம்செய்திகள்

கனடாவில் கொல்லப்பட்ட சீக்கியர் தாக்குதலுக்கு திட்டமிட்டார்: வெளியான புதிய தகவல்

Share

கனடாவில் கொல்லப்பட்ட சீக்கியர் தாக்குதலுக்கு திட்டமிட்டார்: வெளியான புதிய தகவல்

கனடாவில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சீக்கியர் தலைவர், இந்தியாவின் ஹரியானா மாகாணத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர். இந்திய தரப்பில் அவர் காலிஸ்தான் பிரிவினைவாதி மற்றும் தீவிரவாதி என குற்றஞ்சாட்டப்படுபவர்.

1980களில் இருந்தே இவர் குற்ரச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறுகின்றனர். 1996ல் போலி கடவுச்சிட்டு மூலமாக கனடாவுக்கு தப்பியுள்ளதாகவும் இந்திய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

கனடாவில் லொறி சாரதியாகவும் சீக்கியர்கள் தலைவராகவும் வலம் வந்துள்ளார். அத்துடன் பாகிஸ்தான் சென்று ஆயுதப்பயிற்சியும் வெடிகுண்டு பயிற்சியும் முன்னெடுத்துள்ளார்.

மட்டுமின்றி, கனடாவில் இருந்துகொண்டே, இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் பல்வேறு கொலை சம்பவங்களை நடத்தியுள்ளார் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

கனடாவில் போதை மருந்து மற்றும் ஆயுதம் கடத்தும் குழுக்களுடன் இணைந்து நிதி திரட்டி தீவிரவாத செயல்களை முன்னெடுத்துள்ளார். முன்னாள் பஞ்சாப் முதலமைச்சரை படுகொலை செய்த Jagtar Singh Tara என்பவருடன் இணைந்து நிஜ்ஜர் பயங்கரவாத தாக்குதல் ஒன்றை திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.

2014ல் ஹரியானா மாகாணத்தில் அமைந்துள்ள Dera Sacha Sauda தலைமையகத்தை தகர்க்க நிஜ்ஜர் திட்டம் வகுத்ததாகவும், ஆனால் இந்தியாவில் அவரால் வர முடியாமல் போகவே, அந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

Share
தொடர்புடையது
03 6
செய்திகள்இந்தியா

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச் சூழலால், சர்வதேச...

02 5
செய்திகள்உலகம்

ஈரானில் முழுமையான இணைய முடக்கம்: வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இருளில் தவிக்கும் மக்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

01 5
உலகம்செய்திகள்

ஈரான் பள்ளி மீதான வான்வழித் தாக்குதல்: உயிரிழப்புகள் குறித்து தீவிர விசாரணை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பெண்கள்...

06 5
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: வளைகுடா கடற்பரப்பில் 35,000 பேர் தவிப்பு – ஐ.நா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான...