உலகம்செய்திகள்

சட்ட விரோத புலம்பெயர்ந்தோருக்கு வேலை கொடுத்த இந்திய உணவகம்: கடும் அபராதம்

5 20 scaled
Share

சட்ட விரோத புலம்பெயர்ந்தோருக்கு வேலை கொடுத்த இந்திய உணவகம்: கடும் அபராதம்

பிரித்தானியாவில், சட்ட விரோத புலம்பெயர்ந்தோருக்கு வேலை கொடுத்த இந்திய உணவகம் ஒன்றிற்கு புலம்பெயர்தல் அதிகாரிகள் பெருந்தொகை ஒன்றை அபராதமாக விதித்துள்ளார்கள்.

நேற்று முன் தினம், இங்கிலாந்தின் பிரிஸ்டலுக்கு அருகிலுள்ள Nailsea என்னுமிடத்தில் அமைந்துள்ள Posh Spice என்னும் இந்திய உணவகத்தில் புலம்பெயர்தல் அதிகாரிகள் ரெய்டு நடத்தியதைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புலம்பெயர்தல் அதிகாரிகளைக் கண்டதும் சட்டென தாங்கள் அணிந்திருந்த ஏப்ரன்களை கழற்றிவிட்டு அங்கிருந்து பின்வழியாக வெளியேற முயன்றுள்ளார்கள் சிலர்.

அதிகாரிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பின் பக்க வாசலில் சிலரை நிறுத்திவைத்திருக்க, வெளியேற முயன்றவர்கள் அவர்களிடம் வசமாக சிக்கிக்கொண்டார்கள்.

அவர்களில் இருவர் சட்டவிரோதமாக பிரித்தானியாவில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளதால், அவர்கள் இருவரும் நாடுகடத்தப்படும் வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

கடந்த 15 மாதங்களில் இந்த உணவகத்தில் ரெய்டு நடத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும். முதல் முறை ரெய்டின்போது, உணவக உரிமையாளருக்கு 40,000 பவுண்டுகளும், இரண்டாவது முறை 60,000 பவுண்டுகளும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர் மீண்டும் சட்ட விரோத புலம்பெயர்ந்தோரை பணிக்கு வைத்து சிக்கியுள்ளதால், மீண்டும் அவர் அபராதம் செலுத்தவேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இதற்கிடையில், உணவகத்துக்கு சாப்பிட வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள். நீதிமன்ற நடவடிக்கைகள் துவங்கியுள்ள நிலையில், 24 மணி நேரத்துக்கு உணவகம் இயங்காது என அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளார்கள்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...