3 7 scaled
உலகம்செய்திகள்

ஈரானுக்கு பறந்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர்! நடைபெறவுள்ள முக்கிய விவாதம்

Share

ஈரானுக்கு பறந்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர்! நடைபெறவுள்ள முக்கிய விவாதம்

ராணுவ தலைமையுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் செர்ஜி ஷோய்கு ஈரானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கையில் உக்ரைன் மீது வான்வழி தாக்குதல் நடத்துவதற்கு ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட்-136 ட்ரோன்களை ரஷ்யா அதிகமாக பயன்படுத்தி வருகிறது.

ரஷ்யா பயன்படுத்தும் ஈரானிய ட்ரோன்கள் ரஷ்யாவிற்கு வழங்கப்பட்டது உண்மைதான் என்றும், அவை போர் தொடங்குவதற்கு முன்னதாக வழங்கப்பட்டவை என்று தெஹ்ரான் தெரிவித்தது.

ஆனால் தி வாஷிங்டன் போஸ்ட் ரஷ்யாவில் ட்ரோன்கள் உற்பத்தியை தொடங்க 2022ல் அக்டோபரில் ரஷ்யாவும் ஈரானும் மறைமுக ஒப்பந்தம் மேற்கொண்டதாக தெரிவித்தது.

இந்நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு ஈரானின் இராணுவ தலைமையுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரானுக்கு வந்தடைந்துள்ளார்.

ரஷ்ய அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் பேச்சுவார்த்தை விவரங்கள் குறித்து எத்தகைய தகவலும் தெரிவிக்கவில்லை.

இருப்பினும் ஈரானின் செய்தி நிறுவனமான தஸ்னிம், இந்த சந்திப்பில் பாதுகாப்பு ஒத்துழைப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....