3 5 scaled
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் இளைஞர் வெறிச்செயல்

Share

அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் இளைஞர் வெறிச்செயல்

அவுஸ்திரேலியாவில் தேசிய பல்கலைக்கழகத்தில் புகுந்து மாணவிகளை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் தலைநகர் கேன்பராவில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது இளைஞர் ஒருவர் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த 24 வயதுடைய இளைஞர் 2 மாணவிகள் உள்பட 3 பேரை கத்தியால் குத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களில் படுகாயமடைந்த மாணவி ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் தாக்குதல் சம்பவம் குறித்து குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞர் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் அவர் இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் அவர் தாக்குதலில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...