7 19 scaled
உலகம்செய்திகள்

பள்ளத்தாக்கில் செல்போனை வீசிய குரங்கு

Share

பள்ளத்தாக்கில் செல்போனை வீசிய குரங்கு

கேரளாவிற்கு சுற்றுலா சென்ற நபர் ஒருவரின் செல்போனை குரங்கு பள்ளத்தாக்கில் வீசியதால் தேடுதல் பணி நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.

கேரளா மாநிலத்தில் பிலாத்தோட்டம் பகுதிக்கு ஜாசிம் என்பவர் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். அப்பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் தனது நண்பர்களுடன் செல்பி எடுத்துள்ளார்.

அந்த நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு குரங்கு விலை உயர்ந்த செல்போனை பிடுங்கி பள்ளத்தாக்கில் வீசியதுள்ளது.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தவர் உள்ளூர் மக்களிடம் உதவியைக் கேட்டுள்ளார். அந்த பள்ளத்தாக்கு மிகவும் சரிவாக இருந்ததால் யாரும் உதவுவதற்கு முன்வரவில்லை.

ஆகவே தீயணைப்பு துறையினரிடம் உதவியைக்கேட்டுள்ளனர். ஆனால் மனித உயிர்களை காப்பாற்றவே முக்கியத்துவம் கொடுத்து மீட்பு பணியில் ஈடுபடு வோம் என்று கூறி வர மறுத்தனர்.

பின் செல்போனின் விலை ரூ.65 ஆயிரம் எனவும், அதில் பல ஆவணங்கள் இருப்பதாகவும், செல்போனை மீட்டு தருமாறுக் கேட்டுள்ளார். எனவே தீயணைப்பு அதிகாரி ஜித்தன் குமார் நேரடியாக தேடுதல் பணியை ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...