உலகம்செய்திகள்

தமிழ்நாட்டின் பெண் கோடீஸ்வரர்… மொத்த சொத்து மதிப்பு 32,800 கோடி

Share

தமிழ்நாட்டின் பெண் கோடீஸ்வரர்… மொத்த சொத்து மதிப்பு 32,800 கோடி

மென்பொருள் மற்றும் சேவைகள் துறையில் உலகிலேயே இரண்டாவது பெரிய கோடீஸ்வரராக அறியப்படும் ராதா வேம்பு, மென்பொருள் நிறுவனமான Zoho-வின் இணை நிறுவனர் ஆவார்.

தமிழகத்தில் பெண் கோடீஸ்வரர்களில் முதலிடத்தில் இருக்கும் ராதா வேம்பு Zoho நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனரான ஸ்ரீதர் வேம்புவின் சகோதரி ஆவார்.

Zoho நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு 19,000 கோடி என்றே கூறப்படுகிறது. இதனால் மென்பொருள் மற்றும் சேவைகள் துறையில் உலகிலேயே இரண்டாவது பெரிய கோடீஸ்வரராக ராதா வேம்பு அறியப்படுகிறார்.

Zoho நிறுவனத்தில் ஸ்ரீதர் வேம்புவின் பங்கு வெறும் 5 சதவீதம் என்றே கூறப்படுகிறது. ஆனால் ராதா வேம்பு 47.8 சதவீத பங்கினை கொண்டுள்ளார். 2022ல் மட்டும் Zoho நிறுவனத்தின் வருவாய் என்பது 2,700 கோடி என்றே கூறப்படுகிறது.

சென்னையில் பிறந்த ராதா வேம்பு, ஐஐடி மெட்ராஸில் தொழில்துறை நிர்வாகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். 1996ல் தமது உயர் கல்வியை தொடரும் போது தமது சகோதரர் ஸ்ரீதர் வேம்பு உடன் இணைந்து AdvenNet என்ற மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனத்தை நிறுவியுள்ளார்.

இந்த நிறுவனமே பின்னர் Zoho கார்ப்பரேஷன் என பெயர் மாற்றம் பெற்றது. 2023ல் வெளியான தரவுகளின் அடிப்படையில் ராதா வேம்புவின் மொத்த சொத்து மதிப்பு 32,800 கோடி என்றே தெரியவந்துள்ளது

Share
தொடர்புடையது
10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...