23 64fd6d7624a24
உலகம்செய்திகள்

முதியவருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்

Share

முதியவருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்

அமெரிக்காவை சேர்ந்த பள்ளி பேருந்து சாரதி ஒருவர் சுமார் 1,00,000 டொலர் லொட்டரியில்  வெற்றி பெற்றவுடன் தனது வேலையில் இருந்து வெளியேறுவதாக முதலாளிக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

அமெரிக்காவின் கென்டக்கி பகுதியை சேர்ந்த அமெஸ் கியூன் என்பவர் ஜெபர்சன் கவுண்டி பொதுப் பள்ளி ஒன்றில் பேருந்து சாரதியாக பணி புரிந்து வந்துள்ளார்.

இவர் சமீபத்தில்  கென்டக்கி லொட்டரி பவர்பாலில் சரியான நான்கு வெள்ளை பந்துகளை எடுத்ததன் மூலம் சுமார் 1,00,000 டொலர் லொட்டரியில் வெற்றி பெற்றுள்ளார்.

இது தொடர்பாக அமெஸ் கியூன் பேசிய போது, நான் லொட்டரியை பல முறை பார்த்தேன், எண்கள் மாறுகிறதா என்று, ஆனால் அது மாறவில்லை, நான் வெற்றி பெறுவதையே மிகவும் நல்லது என்று எண்ணிக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தான் லொட்டரியில் வெற்றி பெற்றவுடன் நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக தனது தினசரி வேலையில் இருந்து வெளியேறுவது தொடர்பாக முதலாளிக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்.

அதில், நான் லொட்டரியில் வெற்றி பெற்றுள்ளேன், மேலும் நான் வேலைக்கு திரும்பி வரப்போவது இல்லை என்று தெரிவித்தேன் என தெரிவித்துள்ளார்.

அதே சமயம் நான் எனது வேலையை மிகவும் நேசிக்கிறேன், ஆனால் இந்த லொட்டரியின் மூலம் சிறிது முன்கூட்டியே ஓய்வு பெறுவதை குறித்து யோசிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....