23 64f985751325a
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்குள் 4 லட்சம் இந்தியர்கள் உயிரிழப்பார்கள்

Share

அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்குள் 4 லட்சம் இந்தியர்கள் உயிரிழப்பார்கள்

அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்குள் 4 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் இறந்துவிடுவார்கள் என்று புதிய அறிக்கை கூறுகிறது.

ஏற்கனவே அமெரிக்க வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு பேக்லாக்கில் உள்ள இந்தியர்களிடமிருந்து 11 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாக அறிக்கை வெளிப்படுத்துகிறது.

கிரீன் கார்டு அல்லது நிரந்தர குடியுரிமை அட்டை என்பது அமெரிக்க குடியேறியவர்களுக்கு அந்நாட்டில் நிரந்தர வதிவிடத்தை வழங்கும் ஆவணமாகும். தற்போதைய ஜோ பைடன் நிர்வாகத்தின் இந்த முயற்சிகள் இந்திய விண்ணப்பதாரர்களை தொடர்ந்து குழப்பி வருகிறது.

அமெரிக்காவில் நிலுவையில் உள்ள 18 லட்சம் கிரீன் கார்டு விண்ணப்பங்களில் 63% இந்தியர்கள் என்று அமெரிக்க திங்க் கேடோ இன்ஸ்டிடியூட் அறிக்கை கூறுகிறது.

இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் இருந்து புதிய விண்ணப்பதாரர்கள் 134 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். அதாவது வாழ்நாள் கடந்து போகும்.

சுமார் 4,24,000 வேலைவாய்ப்பு அடிப்படையிலான விண்ணப்பதாரர்கள் காத்திருந்து இறக்க நேரிடும். அவர்களில் 90 சதவீதம் பேர் இந்தியர்கள்.

அதன்படி, அமெரிக்காவின் கிரீன் கார்டுக்காக காத்திருந்து 4 லட்சம் இந்தியர்கள் உயிரிழக்க நேரிடும் என இந்தப் புதிய அறிக்கை கூறுகிறது.

வேலை வாய்ப்பு சார்ந்தவர்களுக்கு வழங்கப்படும் கிரீன் கார்டுகளில் 7 சதவீதம் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டைச் சேர்ந்த தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது. இதுவும் மிகவும் திறமையானவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.

தற்போதைய சூழ்நிலையில் கணிசமான பின்னடைவு இருப்பதாகத் தெரிகிறது. பைடன் நிர்வாகத்தின் கீழ் இந்திய-அமெரிக்க சட்டமியற்றும் முயற்சி இருந்தபோதிலும், அமெரிக்க கிரீன் கார்டு காத்திருப்பு நேரம் நெருக்கடியாக மாறியுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...