23 64fc642cc72f4
உலகம்செய்திகள்

உக்ரைனுக்கு போரிடச் சென்ற பிரித்தானியர்:

Share

உக்ரைனுக்கு போரிடச் சென்ற பிரித்தானியர்:

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிராக போரிடச் சென்ற பிரித்தானியர் ஒருவர், நீர் நிலை ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனுக்கு போரிடச் சென்ற பிரித்தானியர்
இங்கிலாந்திலுள்ள Burnley என்னுமிடத்தைச் சேர்ந்த ஜோர்டன் (Jordan Chadwick, 31) 2022ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவுக்கு எதிராக போரிடுவதற்காக உக்ரைன் சென்றுள்ளார்.

அவர் 2011 முதல் 2015 வரை பிரித்தானிய ராணுவத்தில் சேவை புரிந்தவர் ஆவார். சிறு வயதிலிருந்தே ராணுவ வீரராக வேண்டும், சுதந்திரத்துக்காக பாடுபடவேண்டும் என்னும் ஆர்வம் கொண்ட ஜோர்டன், அக்டோபர் 2022இல் உக்ரைனுக்குச் சென்றதாக அவரது தாயாகிய பிரெண்டா (Brenda Chadwick) கூறியுள்ளார்.

இந்நிலையில், ஜூன் மாதம், 26ஆம் திகதி நீர் நிலை ஒன்றில், கைகள் பின் பக்கமாக கட்டப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார் ஜோர்டன்.

அவரது மரணம் தொடர்பான விசாரணை ஒன்று, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவக்கப்பட உள்ளது.

தன் மகனுடைய தைரியம் மற்றும் மனம் தளராமை ஆகிய குணங்களால் தாங்கள் பெருமிதம் அடைந்தாலும், அவரது மரணம் தங்களை அதிர்ச்சியும், கவலையும் அடைய வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஜோர்டனின் தாயாகிய பிரெண்டா.

Share
தொடர்புடையது
Untitled 32
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – கொரியா இடையே பொருளாதார ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை: கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இலங்கை அரசாங்கத்திற்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான 2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதி (EDCF)...

Untitled 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இனமலுவ ஊரக வங்கியில் துணிகர கொள்ளை: 20 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு

ரங்கிரி தம்புள்ளை பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான இனமலுவ ஊரக வங்கிக் கிளையில், மர்ம நபர்கள்...

Untitled 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

என்.டி.பி வங்கியில் ரூ. 13.2 பில்லியன் மோசடி: மத்திய வங்கியின் கண்காணிப்பு தோல்வி குறித்துப் பாராளுமன்றத்தில் கேள்வி

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) குறிப்பிட்ட ஒரு பிரிவில் சுமார் 13.2 பில்லியன் ரூபாய் மதிப்பிலான...

Untitled 29
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வித்யா படுகொலை வழக்கு: ஸ்விஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கடந்த 2015-ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப்...