உலகம்செய்திகள்

வங்கியிலிருந்து வந்த நோட்டீஸால் பொறியாளர் விபரீத முடிவு

4 22 scaled
Share

வங்கியிலிருந்து வந்த நோட்டீஸால் பொறியாளர் விபரீத முடிவு

தமிழக மாவட்டம், கன்னியாகுமரியில் பொறியாளர் ஒருவர், கல்விக்கடன் தொடர்பாக வங்கியிலிருந்து வந்த நோட்டீஸால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் மேலத்தெரு மெயின்ரோடு ஆமத்தன் பொத்தை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் உதயகுமார் (64) மற்றும் ஜெயஸ்ரீ (56). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

மகள் திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வருகிறார். மகன் கணேஷ்ராஜா (28) எம்.இ படித்து முடித்து சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இவர், இரணியல் கிளையில் உள்ள ஒரு தேசிய வங்கியில் கல்விக்கடனாக 2.5 லட்ச ரூபாய் வாங்கியுள்ளார். இந்த கடனை கட்டி முடிக்காததால் இலவச சட்ட மையத்தில் இருந்து கணேஷ் ராஜா இன்று (செப்.08) ஆஜராகுமாறு அழைப்பாணை வந்துள்ளது.

இதன் பிறகு, இந்த தகவலை கணேஷ் ராஜாவின் தாயார் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அப்போது தனது தாயிடம், நான் உயிருடன் இருக்க மாட்டேன் எனக் கூறி கணேஷ் ராஜா கதறி அழுதுள்ளார்.

இந்நிலையில், கணேஷ் ராஜா சென்னையில் இருந்து கன்னியாகுமரியில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கல்விக்கடன் தள்ளுபடி ஆகும் என்று நினைத்தேன் என விரக்தியில் பெற்றோரிடம் மன வேதனையுடன் கூறியுள்ளார்.

அப்போது, அவர்கள் கடனை கட்டி விடலாம் என்றும், இலவச சட்ட மையத்திற்கு ஆஜராகி விட்டு வரும்படியும் கூறியுள்ளனர்.

பின்னர், மாடி அறைக்கு சென்ற கணேஷ் ராஜா கதவை பூட்டியுள்ளார். இதனால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து பார்த்த போது தூக்கிட்டு மயங்கிய நிலையில் கணேஷ் ராஜா கிடந்துள்ளார்.

இதனையடுத்து, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, கணேஷ் ராஜா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இந்த சம்பவம் குறித்து உதயகுமார் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
Related Articles
23 4
உலகம்செய்திகள்

பிரான்ஸ் குடியுரிமை விதிகளை கடுமையாக்க உத்தரவிட்ட அமைச்சர்: சாடியுள்ள மனித உரிமைகள் அமைப்பு

பிரான்ஸ் உள்துறை அமைச்சர், குடியுரிமை விதிகளை கடுமையாக்குமாறு தனது அமைச்சக மற்றும் துறைசார் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்....

21 5
உலகம்செய்திகள்

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி

பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம்...

24 3
உலகம்செய்திகள்

அப்பாவிகளை கொன்ற பயங்கரவாதிகளுக்கு தண்டனை கொடுத்துள்ளோம்! இந்திய பாதுகாப்புத்துறை

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் உரிமையை இந்தியா பயன்படுத்தியிருக்கிறது என பாதுகாப்புத்துறை...

26 3
உலகம்செய்திகள்

3 வருடங்கள் போன் பயன்படுத்தாமல் SSC-ல் தேர்ச்சி பேற்று , பின்னர் UPSC-ல் தேர்ச்சி பெற்ற இளம் அதிகாரி யார்?

3 வருடங்கள் தொலைபேசியைப் பயன்படுத்தாமல் எஸ்எஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் 24 வயதில் யுபிஎஸ்சியில்...