6 22 scaled
உலகம்செய்திகள்

இளம் வீடியோ கேம் டெவலப்பர்; ஆறு வயது கனேடிய சிறுமி கின்னஸ் சாதனை

Share

இளம் வீடியோ கேம் டெவலப்பர்; ஆறு வயது கனேடிய சிறுமி கின்னஸ் சாதனை

ஆறு வயதான சிமர் குரானா, உலகின் மிக இளைய வீடியோ கேம் டெவலப்பர் என்ற கின்னஸ் உலக சாதனையில் நுழைந்துள்ளார்.

சிமர் தனது முதல் வீடியோ கேமை உருவாக்கியபோது அவருக்கு 6 வயது 335 நாட்கள்.

கனடாவின் ஒன்ராறியோவில் வசிக்கும் சிமர், வாரத்திற்கு மூன்று வகுப்புகள் எடுத்து Coding-ஐ முறையைக் கற்கத் தொடங்கினார். சிமர் மிகவும் இளம் வயதிலேயே computer programming உலகில் நுழைவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியபோது, பல coders சிமாரை சாத்தியமற்றது என்று நிராகரித்தனர்.

ஆனால் அவரது தந்தை பராஸ் குரானா, அவளுக்கு ஒரு ஆசிரியரைக் கண்டுபிடித்து கோடிங்கை தொடங்க உதவினார்.

ஜிம்மர் உருவாக்கிய முதல் கேம் ‘Healthy Food Challenge’. ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை நிறுத்துமாறு மருத்துவர் கூறியதை அடுத்து அவளுக்கு இந்த யோசனை வந்தது.

“மருத்துவர் என்னிடம் ஆரோக்கியமாக சாப்பிடச் சொன்னார், அதனால் ஆரோக்கியமான உணவு மற்றும் ஜங்க் ஃபுட் பற்றி ஒரு விளையாட்டை உருவாக்க முடிவு செய்தேன்,” என்று அவர் கின்னஸ் உலக சாதனை கூறினார்.

“ஜிமர் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து தானே கணிதத்தைக் கற்றுக் கொண்டார். மழலையர் பள்ளியில் படிக்கும் போதே அவரால் grade 3 கணிதத்தைக் கற்றுக் கொள்ள முடிந்தது. கையில் உள்ளதைப் பயன்படுத்தி கைவினைப்பொருட்கள் மற்றும் கேம்களை செய்கிறார். அத்தகைய திறன்களைக் கொண்ட கோடிங் துறையில் அவர் இயல்பாகவே சிறந்து விளங்குவார் என்று நான் உணர்ந்தேன். அதனால், நான் ஒரு டெமோ கோடிங் வகுப்பை முயற்சிக்கும்படி அவளை ஓக்கப்படுத்தினேன், அது அவளுக்குப் பிடித்திருந்தது” என்று தந்தை பராஸ் குரானா கூறினார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 95099f5203
செய்திகள்இலங்கை

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன்: வரவு செலவுத் திட்ட அமர்வுக்கு மத்தியில் உணர்வெழுச்சி!

தேச விடுதலைக்காகப் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21)...

images 1 11
செய்திகள்இலங்கை

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினோம்: சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் பணியவில்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

image e0f1498f29
செய்திகள்இலங்கை

தமிழ் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்: வேலணை சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகச் சுடரேற்றல் நிகழ்வு!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப...

Archchuna Ramanathan 1200px 24 11 22
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்ற உணவகத்தில் எம்.பி.க்கு கொலை மிரட்டல்: முஹம்மட் பைசல் மீது அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், இன்று (நவ 21)...