4 19 scaled
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் ரஷ்யர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

Share

ஜேர்மனியில் ரஷ்யர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

ஜேர்மனியில் ரஷ்யர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் வாழ்ந்து வரும் ரஷ்ய நாட்டவரான Valid D என்பவர், சமூக ஆர்வலரான Mokhmad Abdurakhmanov என்பவரைக் கொல்ல திட்டம் தீட்டியதற்காக அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Valid, ஆயுதம் ஒன்றை வாங்கியதாகவும், கூலிக்கு கொலை செய்யும் ஒருவரை ஏற்பாடு செய்ததாகவும், அவரை ஜேர்மனிக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்ததாகவும், Mokhmadஇன் சகோதரரையும் அவரது வீட்டையும் வேவு பார்த்ததாகவும், துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்ததாகவும் பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்த கொலை முயற்சி, Mokhmadஐ அமைதியாக்குவதற்காக மட்டுமானதல்ல, அவரது சகோதரரான Tumso Abdurakhmanovஐ மிரட்டுவதற்காகவும்தான்.

ஜேர்மனியில் ரஷ்யர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை: பின்னணி | 10 Years In Prison For A Russian In Germany

அதாவது, Tumso, செசன்யாவின் தலைவரான Ramzan Kadyrovஐ கடுமையாக விமர்சிப்பவர். அவர் செசன்யாவிலிருந்து தப்பியோடி ஸ்வீடனில் வாழ்ந்துவருகிறார்.

ஆகவே, அவரை மிரட்டுவதற்காகவும்தான் இந்த கொலை முயற்சி நடந்துள்ளது. Ramzan Kadyrovஇன் ஆதரவாளரான ஒருவரின் உத்தரவின் பேரிலேயே Mokhmadஐ கொல்லும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3
செய்திகள்இலங்கை

தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகள் கோரி சுமார் 20 எம்.பி.க்கள் விண்ணப்பம் – பாதுகாப்பு அமைச்சின் பரிசீலனையில் கோரிக்கை!

பாராளுமன்ற வட்டாரத் தகவல்களின்படி, தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

MediaFile 2
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியவில்லை: போதைப்பொருள் கலாசாரம் மேலோங்கியுள்ளதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

தற்போதைய அரசாங்கத்தினால் சட்டம் ஒழுங்கை உரிய வகையில் நிலைநாட்ட முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

MediaFile 3
இலங்கைசெய்திகள்

அரச வருமானம் 24.8% அதிகரிப்பு: 2025 முதல் அரையாண்டில் மொத்த வருமானம் ரூ. 2,321.7 பில்லியன்!

இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் அன்பளிப்புகள் நீங்கலாக அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,321.7 பில்லியன் ரூவாக...

MediaFile 1
இலங்கைசெய்திகள்

உடுகம்பொல சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு: ‘உயரதிகாரியின் சகோதரி’ எனக் கூறியவர் போலியானவர் என பொலிஸ் உறுதி!

உடுகம்பொல வாரச் சந்தைக்கு அருகில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த பெண்...