7 15 scaled
உலகம்செய்திகள்

ஆசிரியருக்கு 7,000 ராக்கி கயிறுகள் கட்டிய மாணவிகள்

Share

ஆசிரியருக்கு 7,000 ராக்கி கயிறுகள் கட்டிய மாணவிகள்

இந்திய மாநிலம், பீகாரில் ரக்ஷா பந்தன் விழாவையொட்டி ஆசிரியர் ஒருவருக்கு மாணவர்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து 7 ஆயிரம் ராக்கி கயிறுகள் கட்டியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கான உறவை பலப்படுத்தும் பண்டிகையான ரக்ஷா பந்தன். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முழு நிலவு அன்று இந்த பண்டிகை கொண்டாடப்படும்.

இந்த பண்டிகையில் சகோதரிகள் தங்களது சகோதரர் கையில் ராக்கி என்னும் புனித கயிறு ஒன்றை கட்டுவார்கள். தீயவற்றில் இருந்து சகோதரர்களைக் காப்பாற்றவும், அவர்களது நல்வாழ்வுக்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் இந்த கயிறு கட்டுவது வழக்கமாக உள்ளது.

பீகார் மாநிலம், பாட்னாவில் கான் என்ற ஆசிரியர் ஒன்லைன் மூலமாகவும், டியூசன் மூலமாகவும் பாடம் எடுத்து வருகிறார். இவர், முழு அர்ப்பணிப்புடன் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான முறையில் கல்வி கற்று கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இவர், ரக்ஷா பந்தனையொட்டி ராக்கி கயிறு கட்ட மாணவிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனால் ஆயிரக்கணக்கான மாணவிகள், சிறுமிகள் மற்றும் பெண்கள் திரண்டு கான் கையில் ராக்கி கயிற்றை கட்டினர்.

இது குறித்து கான் கூறுகையில்,”சுமார் 7 ஆயிரம் பெண்கள் தனது மணிக்கட்டில் ராக்கி கட்டியதாகவும், இது உலக சாதனை என்றும்” தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....