7 15 scaled
உலகம்செய்திகள்

ஆசிரியருக்கு 7,000 ராக்கி கயிறுகள் கட்டிய மாணவிகள்

Share

ஆசிரியருக்கு 7,000 ராக்கி கயிறுகள் கட்டிய மாணவிகள்

இந்திய மாநிலம், பீகாரில் ரக்ஷா பந்தன் விழாவையொட்டி ஆசிரியர் ஒருவருக்கு மாணவர்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து 7 ஆயிரம் ராக்கி கயிறுகள் கட்டியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கான உறவை பலப்படுத்தும் பண்டிகையான ரக்ஷா பந்தன். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முழு நிலவு அன்று இந்த பண்டிகை கொண்டாடப்படும்.

இந்த பண்டிகையில் சகோதரிகள் தங்களது சகோதரர் கையில் ராக்கி என்னும் புனித கயிறு ஒன்றை கட்டுவார்கள். தீயவற்றில் இருந்து சகோதரர்களைக் காப்பாற்றவும், அவர்களது நல்வாழ்வுக்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் இந்த கயிறு கட்டுவது வழக்கமாக உள்ளது.

பீகார் மாநிலம், பாட்னாவில் கான் என்ற ஆசிரியர் ஒன்லைன் மூலமாகவும், டியூசன் மூலமாகவும் பாடம் எடுத்து வருகிறார். இவர், முழு அர்ப்பணிப்புடன் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான முறையில் கல்வி கற்று கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இவர், ரக்ஷா பந்தனையொட்டி ராக்கி கயிறு கட்ட மாணவிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனால் ஆயிரக்கணக்கான மாணவிகள், சிறுமிகள் மற்றும் பெண்கள் திரண்டு கான் கையில் ராக்கி கயிற்றை கட்டினர்.

இது குறித்து கான் கூறுகையில்,”சுமார் 7 ஆயிரம் பெண்கள் தனது மணிக்கட்டில் ராக்கி கட்டியதாகவும், இது உலக சாதனை என்றும்” தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...