உலகம்செய்திகள்

ரஷ்யாவிற்குள் புகுந்து ட்ரோன் தாக்குதல்

Share

ரஷ்யாவிற்குள் புகுந்து ட்ரோன் தாக்குதல்

தென் மேற்கு ரஷ்ய நகரமான பிஸ்கோவ்வில் உள்ள விமான நிலையம் மீது புதிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் பிஸ்கோவ் நகரில் உள்ள விமான நிலையம் மீது புதிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, இந்த நகரம் உக்ரைனின் எல்லையில் இருந்து 600 கி மீ தொலைவில் எஸ்டோனியா நாட்டு எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக உள்ளூர் கவர்னர் தெரிவித்துள்ள தகவலில், ட்ரோன் தாக்குதலை ரஷ்ய ராணுவம் முறியடித்தது என்று தெரிவித்தார், மேலும் மிகப்பெரிய வெடிப்பு சத்தத்துடன் கூடிய தீயை காட்டும் வீடியோ ஒன்றையும் அவர் இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

ரஷ்ய உள்நகரங்கள் மீது கடந்த சில நாட்களாக தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், பிஸ்கோவ் நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தங்கள் பங்கு இருப்பதாக இதுவரை உக்ரைன் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.

பிஸ்கோவ் விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதலில் இரண்டு போக்குவரத்து விமானம் சேதமடைந்து இருப்பதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில், ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் Ilyushin 76 போக்குவரத்து விமானத்தில் தீ பற்றியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல் நிலை தகவல்படி, பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என இதில் யாரும் பாதிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...