உலகம்செய்திகள்

ரஷ்யாவிற்குள் புகுந்து ட்ரோன் தாக்குதல்

Share

ரஷ்யாவிற்குள் புகுந்து ட்ரோன் தாக்குதல்

தென் மேற்கு ரஷ்ய நகரமான பிஸ்கோவ்வில் உள்ள விமான நிலையம் மீது புதிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் பிஸ்கோவ் நகரில் உள்ள விமான நிலையம் மீது புதிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, இந்த நகரம் உக்ரைனின் எல்லையில் இருந்து 600 கி மீ தொலைவில் எஸ்டோனியா நாட்டு எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக உள்ளூர் கவர்னர் தெரிவித்துள்ள தகவலில், ட்ரோன் தாக்குதலை ரஷ்ய ராணுவம் முறியடித்தது என்று தெரிவித்தார், மேலும் மிகப்பெரிய வெடிப்பு சத்தத்துடன் கூடிய தீயை காட்டும் வீடியோ ஒன்றையும் அவர் இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

ரஷ்ய உள்நகரங்கள் மீது கடந்த சில நாட்களாக தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், பிஸ்கோவ் நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தங்கள் பங்கு இருப்பதாக இதுவரை உக்ரைன் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.

பிஸ்கோவ் விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதலில் இரண்டு போக்குவரத்து விமானம் சேதமடைந்து இருப்பதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில், ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் Ilyushin 76 போக்குவரத்து விமானத்தில் தீ பற்றியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல் நிலை தகவல்படி, பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என இதில் யாரும் பாதிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...