23 64ee48af4f5d3
உலகம்செய்திகள்

கல்லைக் கட்டி ஆற்றில் வீசப்பட்ட சிறுவன்: உதவியை நாடும் சர்வதேச பொலிசார்

Share

கல்லைக் கட்டி ஆற்றில் வீசப்பட்ட சிறுவன்: உதவியை நாடும் சர்வதேச பொலிசார்

ஜேர்மனியில் டானூப் நதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் தொடர்பில் சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போல் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் விவகாரம் ஜேர்மன் பொலிசாரை திணறடிக்க வைத்துள்ளது. 5 அல்லது 6 வயது மதிக்கத்தக்க அந்த சிறுவனின் சடலமானது பவேரியாவில் கடந்த ஆண்டு மே மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுவனை கல் ஒன்றால் கட்டி டானூப் நதியில் வீசியுள்ளனர். ஜேர்மன் பொலிசாரால் சிறுவனை அடையாளம் காண முடியவில்லை என்பதுடன் மரண காரணத்தையும் உறுதி செய்ய முடியாமல் போயுள்ளது.

இந்த நிலையிலேயே சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போல் உதவியை நாடியதுடன், Black Notice எனப்படும் அடையாளம் தெரியாத உடல்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க சர்வதேச எச்சரிக்கை விடுக்கவும் வலியுறுத்தியது.

கடந்த மே 19 அன்று சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டபோது, எத்தனை நாட்கள் தண்ணீரில் இருந்தது என்பது தெரியவில்லை என்று இன்டர்போல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் 15 கிலோ உடல் எடையுடன் 3 அடி 7 அங்குலம் உயரத்துடன் காணப்பட்டான் என பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், சிறுவன் ஜேர்மனிக்கு வெளியே சில காலம் தங்கியிருந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ள பொலிசார், 195 உறுப்பு நாடுகளைக் கொண்ட இன்டர்போல் இந்த விவகாரத்தில் உதவ முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், சிறுவன் தொடர்பில் எங்கேயோ ஒருவருக்கு உண்மை தெரியும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், உதவ முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...