23 64ee57d011f41 md
உலகம்செய்திகள்

மொத்தம் 1,200 விஷப் பொதிகள்… 40 நாடுகள்: கனேடியர் மீது நெருக்கடி

Share

மொத்தம் 1,200 விஷப் பொதிகள்… 40 நாடுகள்: கனேடியர் மீது நெருக்கடி

தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு சோடியம் நைட்ரைட் ரசாயனத்தை விற்பனை செய்த கனேடியர் தொடர்பில் மேலும் பல பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த நபர் 40 நாடுகளில் மொத்தம் 1,200 விஷப் பொதிகளை அனுப்பியுள்ளதாக நம்பப்படுகிறது. இந்த நிலையில் விரிவான விசாரணைக்கு பின்னர் ஒரு டசின் புதிய குற்றச்சாட்டுகளை அந்த நபர் மீது சுமத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முன்பு ஒன்ராறியோ மாகாணத்தில் 57 வயதான கென்னத் லா என்பவர் மீது ஆலோசனை வழங்குதல் அல்லது தற்கொலைக்கு உதவியதாக இரண்டு குற்றச்சாட்டுகள் பதியப்பட்டது.

ஆனால் தற்போது மாகாணம் முழுக்க பல எண்ணிக்கையிலான தற்கொலை சம்பவங்கள் தொடர்பில் கென்னத் லா மீது 12 புதிய குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளது. மரணமடைந்தவர்கள் 16 முதல் 36 வயதுடையவர்கள் என யோர்க் பிராந்திய காவல்துறை இன்ஸ்பெக்டர் சைமன் ஜேம்ஸ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மேலும், பிரித்தானியாவில் மட்டும் 88 தற்கொலை சம்பவங்களில் கென்னத் லாவுக்கும் தொடர்பிருக்கலாம் என அதிகாரிகள் தரப்பு சந்தேகம் தெரிவித்துள்ளது. மட்டுமின்றி கென்னத் லாவின் வாடிக்கையாளர்கள் பட்டியலை ஆய்வு செய்த போது அதில் 200 பேர் பிரித்தானியர்கள் என தெரியவந்துள்ளது.

கென்னத் லா நிர்வகித்துவந்த இணைய பக்கம் ஊடாக 272 பேர் விஷப் பொதி வாங்கியுள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தற்போது பதியப்பட்டுள்ள வழக்குகளில் ரொறன்ரோவில் நால்வர் யோர்க் பிராந்தியத்தில் மூவர், டர்ஹாம் பிராந்தியத்தில் ஒருவர்,

லண்டன், ஒன்ராறியோவில் ஒருவர், தண்டர் பே, வாட்டர்லூ பகுதி மற்றும் பீல் பகுதியில் தலா ஒருவர் என உறுதி செய்யபப்ட்டுள்ளது. கனடாவில் மட்டும் 14 தற்கொலை சம்பவங்களில் கென்னத் லா தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கென்னத் லா அனுப்பியுள்ள 1,200 விஷப் பொதிகளில் 160 எண்ணிக்கை கனடா முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மட்டுமின்றி இத்தாலி, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அமெரிக்காவிலும் கென்னத் லா அனுப்பிய விஷப் பொதி குறித்து அதிகாரிகள் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மக்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு உதவுவதற்காக அவர் விருப்பத்துடன் ரசாயனத்தை விற்பனை செய்வதாக வெளியான செய்திகளை கென்னத் லா மறுத்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...