உலகம்செய்திகள்

நைஜர் ராணுவ அரசுக்கு பிரான்ஸ் ஜனாதிபதியின் பதில்

4 17 scaled
Share

நைஜர் ராணுவ அரசுக்கு பிரான்ஸ் ஜனாதிபதியின் பதில்

நைஜர் நாட்டின் ராணுவ ஆட்சியாளர்கள் அழுத்தம் கொடுத்தாலும் பிரான்ஸ் தூதர் அங்குதான் தங்கியிருப்பார் என்று கூறியுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரான்.

நைஜர் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ராணுவம், கடந்த வெள்ளிக்கிழமையன்று, நைஜர் நாட்டுக்கான பிரான்ஸ் தூதர் 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

பிரான்ஸ் தூதரான Sylvain Itté, நைஜரின் வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பிற்கான அழைப்பிற்கு பதிலளிக்க மறுத்ததால், அவரை நாட்டை விட்டு வெளியேற்ற முடிவு செய்யப்பட்டதாக ராணுவ அரசின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

மேலும், பிரான்ஸ் அரசின் நடவடிக்கைகள், நைஜர் நாட்டின் கொள்கைகளுக்கு முரணாக அமைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியிருந்தது.

நைஜர் ராணுவம், ஜூலை மாதம் 26ஆம் திகதி, நாட்டின் ஜனாதிபதி Mohamed Bazoumஇன் ஆட்சியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கூடியிருந்த பல்வேறு நாடுகளின் தூதர்களிடையே உரையாற்றிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், கடந்த வெள்ளிக்கிழமை நாட்டை விட்டு வெளியேற 48 மணிநேர காலக்கெடு வழங்கப்பட்ட போதிலும், நைஜருக்கானா பிரான்ஸ் தூதரான Sylvain Itte நைஜர் தலைநகரில்தான் இருப்பதாக தெரிவித்தார்.

பிரான்சும் அதன் தூதர்களும் சமீபத்திய மாதங்களில், சில நாடுகளில், குறிப்பாக சூடான் முதல் நைஜர் வரை, கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளனர் என்று கூறிய மேக்ரான், இந்த தருணத்தில் அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

எங்கள் கொள்கை சரியானது என்று நான் நினைக்கிறேன் என்று கூறிய மேக்ரான். அது நைஜர் ஜனாதிபதி Bazoumஇன் தைரியத்தின் அடிப்படையிலும், சட்டத்திற்குப் புறம்பான அதிகாரிகளின் அனைத்து அறிவிப்புகளையும் மீறி, அனைத்து அழுத்தங்களையும் மீறி, நைஜரிலேயே தங்கியிருக்கும் எங்கள் தூதரின் உறுதியின் அடிப்படையிலுமானது என்று கூறியுள்ளார்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...