போர் விமானங்களை கொத்தாக அனுப்பி தைவானை மீண்டும் சீண்டிய சீனா
உலகம்செய்திகள்

போர் விமானங்களை கொத்தாக அனுப்பி தைவானை மீண்டும் சீண்டிய சீனா

Share

போர் விமானங்களை கொத்தாக அனுப்பி தைவானை மீண்டும் சீண்டிய சீனா

தைவான் எல்லை அருகாமையில் சீனா பயிற்சி முன்னெடுத்துள்ள நிலையில், சனிக்கிழமை மட்டும் 40கும் மேற்பட்ட போர் விமானங்கள் எல்லையை மீறியதாக தைவான் கொந்தளித்துள்ளது.

தேர்தலில் ஆதிக்கத்தை செலுத்தவே
தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கையில், தைவான் ஜலசந்தியை சீனாவின் 26 விமானங்கள் கடந்து சென்றதாக குறிப்பிட்டுள்ளார். தைவானில் முன்னெடுக்கப்பட இருக்கும் தேர்தலில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தவே சீனா முயன்று வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

ஆனால், சீனா தரப்பில், போர் சூழலில் படைகளின் திறன் குறித்து சோதனை மேற்கொள்ளவே இந்த பயிற்சி என குறிப்பிட்டுள்ளனர். சனிக்கிழமை தைவான் எல்லையில் கடற்படை மற்றும் விமானப்படையின் ரோந்து மற்றும் பயிற்சிகளை சீனா முன்னெடுத்தது.

மேலும், கடும் எதிர்ப்பையும் மீறி தைவானின் துணை ஜனாதிபதி வில்லியம் லாய் அமெரிக்கா சென்றதும் சீனாவை கோபம் கொள்ள வைத்துள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி தைவானுக்கு விஜயம் செய்ததையடுத்து, சீனா இதுபோன்று பெரிய ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டது.

பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக
திரும்பவும், கலிபோர்னியாவில் தைவான் ஜனாதிபதி தற்போதைய சபாநாயகரை சந்தித்த பின்னரும் சீனா தனது கோபத்தை வெளிப்படுத்தியது. ஜனவரியில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வில்லியம் லாய் முதன்மை வேட்பாளராக பார்க்கப்படுகிறார்.

ஆனால் சீனா தெரிவிக்கையில், வில்லியம் லாய் எப்போதும் பிரச்சனையை கிளப்புபவர். அவரது தலைமையில் நாட்டின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக மாறும் என குறிப்பிட்டுள்ளது.

 

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...