இந்தியாவை ஆண்ட பிரித்தானிய மண்ணில் ஒலித்த ஜன கண மன!
உலகம்செய்திகள்

இந்தியாவை ஆண்ட பிரித்தானிய மண்ணில் ஒலித்த ஜன கண மன!

Share

இந்தியாவை ஆண்ட பிரித்தானிய மண்ணில் ஒலித்த ஜன கண மன!

200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட பிரித்தானிய மண்ணில் இந்தியாவின் தேசிய கீதமான ‘ஜன கண மன’ இன்று பாடப்பட்டது.

‘ஜன கண மன’ எப்பொழுது கேட்டாலும் ஒவ்வொரு இந்தியரின் உள்ளமும் பொங்கும். இது நாட்டின் மீதான அன்பையும் பற்றையும் குறிக்கிறது. இது சாதாரணமாக வந்துவிடாவில்லை, தொழிலுக்காக இந்தியா வந்து இங்குள்ள செல்வங்களைப் பார்த்து பேராசைப்பட்டு, இந்தியர்களை அடிமையாக்கி 200 ஆண்டுகாலம் ஆண்ட வெள்ளையர்களை விரட்டியடித்து சுதந்திரம் பெற்றோம். அதனால் இந்தியர்களுக்கு சுதந்திர தினம் என்பது மிகப்பாரிய விடியம்.

இந்தியாவை எந்த நாடு ஆட்சி செய்ததோ, அதே நாட்டில் இந்தியர்களுக்கு உயர் பதவிகள் கிடைத்தன. மேலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானியாவின் பிரதமரானார். இந்தியர்கள் எங்கு குடியேறினாலும், இந்திய வேர்கள் அவர்கள் மனதில் எப்போதும் இருக்கும்.

இந்தியா தனது 77-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், இரண்டு நூற்றாண்டுகள் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் மண்ணில் இந்தியாவின் சுதந்திரக் கொண்டாட்டங்கள் கொண்டாடப்படுகின்றன.

100 இசைக்கலைஞர்கள் இந்தியாவின் தேசிய கீதமான ‘ஜன கண மன‘ பாடினர். பிரித்தானிய மண்ணில் ‘ஜன கண மன’ படும் உற்சாகத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இந்திய இசையமைப்பாளர், மூன்று முறை ‘கிராமி விருது’ வென்ற ரிக்கி கேஜ் அதை செய்தார். 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் இந்த ‘ஜன கண மன’ வீடியோ வெளியிடப்பட்டது.

இந்தச் சந்தர்ப்பத்தில் உணர்ச்சிவசப்படும் ரிக்கி கேஜ், “லண்டனில் உள்ள புகழ்பெற்ற ‘அபே ரோட் ஸ்டுடியோஸ்’ (Abbey Road Studios in London) அரங்கில் ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவைச் சேர்ந்த 100 கலைஞர்கள் கொண்ட குழுவுடன் ஜன கண மன பாடலைப் பதிவு செய்தேன். இந்திய தேசிய கீதத்தை பதிவு செய்த மிகப்பெரிய இசைக்குழு இதுவாகும். ஆச்சரியமாக வெளிவந்தது. பாடலின் முடிவில் என் உச்சந்தலை சிலிர்த்தது. இந்திய இசையமைப்பாளராக சிறந்த அனுபவம் பெற்றதாக அவர் கூறினார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....