பயணிகளை நோக்கி கூச்சலிட்ட நபர்! உடனடியாக தரையிறங்கிய விமானம்
உலகம்செய்திகள்

பயணிகளை நோக்கி கூச்சலிட்ட நபர்! உடனடியாக தரையிறங்கிய விமானம்

Share

பயணிகளை நோக்கி கூச்சலிட்ட நபர்! உடனடியாக தரையிறங்கிய விமானம்

அவுஸ்திரேலியாவில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த நபர் ஒருவர், பயணிகளை நோக்கி திடீரென கேள்வி எழுப்பியதால் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிட்னியில் இருந்து கோலாலம்பூருக்கு MH122 Airbus-a330 எனும் விமானம் புறப்பட்டது. அப்போது பயணி ஒருவர் சக பயணிகளை நோக்கி ‘நீங்கள் அல்லாஹ்வின் அடிமைகளா?’ எனக் கேட்டு கூச்சலிட்டுள்ளார்.

அவரது இந்த செயல் பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து விமானக் குழுவினர் சந்தேகமடைந்து அவரது பையை ஆய்வு செய்தனர்.

ஆனால் அதில் ஆபத்தான எதுவும் இல்லை என தெரிந்தது. எனினும் பயணிகளின் பாதுகாப்பு கருதி, மாலை 4 மணிக்கு முன்னதாக விமானம் மீண்டும் சிட்னியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மேலும் விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் ஒன்றின் முடிவில் விமானம் தனிமைப்படுத்தப்பட்டது. அவசரகால வாகனங்கள் விமானத்தை சுற்றி வளைத்ததைத் தொடர்ந்து பயணிகள் இறங்கினர்.

சில பயணிகள் ஜெட் விமானத்தின் மற்றொரு பகுதிக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையில் முகமது என்று கூறிக்கொண்ட அச்சுறுத்தலை ஏற்படுத்திய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...