உலகம்
தமிழ்நாட்டில் இந்தி!! நிர்மலா சீதாராமனுக்கு சின்மயி கூறிய பதில்
தமிழ்நாட்டில் இந்தி மொழியை படிக்க விடாமல் தடுத்தார்கள் என்று கூறிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாடகி சின்மயி பதில் அளித்துள்ளார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக இந்தியை திணிப்பை எதிர்க்கிறோம் என்ற பெயரில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை கற்று கொள்ள கூடாது என்று இருந்தது” எனக் கூறினார்.
மேலும் அவர், “என்னுடைய வாழ்நாள் அனுபவத்தில் சொல்கிறேன். தமிழ்நாட்டில் இந்தி மொழியை படிக்க விடாமல் தடுத்தார்கள்” என்று திமுகவை சாடி பேசினார்.
நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு பாடகி சின்மயி தனது ட்வீட் மூலமாக பதில் கொடுத்துள்ளார். அதில் அவர்,” தமிழ்நாட்டில் இருப்பவர்கள் அவர்கள் விரும்பும் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் உள்ள தக்ஷிண பாரத் ஹிந்தி பிரச்சார சபாவில் அதிக எண்ணிக்கையிலான ஹிந்தி கற்பவர்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றனர். தமிழ்நாட்டிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான இந்தி டாப்பர்கள் வருகிறார்கள்.
நான் சமஸ்கிருதம், தெலுங்கு மற்றும் ஹிந்தியை இரண்டாவது மொழிகளாக கற்றேன். சென்னையில் படிக்கும் போது ஜெர்மன் மற்றும் பிரஞ்சு கூட கற்றேன். எனது உறவினர் தமிழ் மற்றும் ஹிந்தியுடன் துலு மற்றும் படகாவையும் பேசினார்.
மெட்ராஸ் சமஸ்கிருதக் கல்லூரி 1906 முதல் இயங்கி வருகிறது. சமஸ்கிருதம் என்பது பலருக்கு மிகவும் கடினமான மொழியாகும். தாய்மொழிச் செல்வாக்கின் காரணமாக , இந்தியை இரண்டாவது அல்லது மூன்றாவது மொழியாகக் கற்றவர்களுக்கு அதைப் பேசுவதற்குத் தடையாக இருந்ததே அவர்கள் கேலி செய்யப்பட்டதற்கு காரணம்.
வரலாற்று ரீதியாக கிளர்ச்சிக்கு ஒரு உண்மையான காரணம் இருந்தது. ஏன் என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்வது நல்லது” என்று பதில் அளித்துள்ளார்.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: காசாவில் மணிப்பூர் சம்பவம்: உறுதி செய்த இஸ்ரேல் - tamilnaadi.com