பிரான்ஸின் பாரிஸ் நகர குடியிருப்பில் வெடிப்பு விபத்து: 5 பேர் படுகாயம்
உலகம்செய்திகள்

பிரான்ஸின் பாரிஸ் நகர குடியிருப்பில் வெடிப்பு விபத்து: 5 பேர் படுகாயம்

Share

பிரான்ஸின் பாரிஸ் நகர குடியிருப்பில் வெடிப்பு விபத்து: 5 பேர் படுகாயம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் 5 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

வடக்கு பாரிஸில் உள்ள குடியிருப்பு பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட திடீர் வெடிப்பு விபத்தில் 5 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக பொலிஸார் மற்றும் அவசர சேவைகள் தகவல் தெரிவித்துள்ளன.

18வது அரோண்டிஸ்மென்ட் (Arrondissement) பகுதியில் இந்த சக்தி குறைந்த வெடிப்பு விபத்து ஏற்பட்டுள்ளது, ஆனால் இந்த திடீர் வெடிப்பை தொடர்ந்து எத்தகைய தீ பரவல் சம்பவங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கட்டிடத்தின் ஜன்னல் மற்றும் சுவர் பகுதிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. சேதமடைந்த கட்டிடம் சமீபத்தில் தான் மறு புதுப்பிப்பு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர், மேலும் பாதிக்கப்பட்ட கட்டிடத்தில் இருந்த மற்ற நபர்களையும் அங்கிருந்து பாதுகாப்பாக அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த வெடிப்பு சம்பவம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் நகர மையத்தில் இருந்த கட்டிடத்தில் கடந்த ஜூன் மாத ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தை தான் நினைவுப்படுத்துகிறது.

இந்த தீ விபத்தில் 3 பேர் வரை உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...

05 15
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்களுடன் சென்ற 08 பேர் கைது: மவுசாக்கலை சோதனைச் சாவடியில் சிக்கினர்!

புனித சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் என்ற போர்வையில் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 8 பேர்...