பிரான்ஸின் பாரிஸ் நகர குடியிருப்பில் வெடிப்பு விபத்து: 5 பேர் படுகாயம்
உலகம்செய்திகள்

பிரான்ஸின் பாரிஸ் நகர குடியிருப்பில் வெடிப்பு விபத்து: 5 பேர் படுகாயம்

Share

பிரான்ஸின் பாரிஸ் நகர குடியிருப்பில் வெடிப்பு விபத்து: 5 பேர் படுகாயம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் 5 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

வடக்கு பாரிஸில் உள்ள குடியிருப்பு பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட திடீர் வெடிப்பு விபத்தில் 5 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக பொலிஸார் மற்றும் அவசர சேவைகள் தகவல் தெரிவித்துள்ளன.

18வது அரோண்டிஸ்மென்ட் (Arrondissement) பகுதியில் இந்த சக்தி குறைந்த வெடிப்பு விபத்து ஏற்பட்டுள்ளது, ஆனால் இந்த திடீர் வெடிப்பை தொடர்ந்து எத்தகைய தீ பரவல் சம்பவங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கட்டிடத்தின் ஜன்னல் மற்றும் சுவர் பகுதிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. சேதமடைந்த கட்டிடம் சமீபத்தில் தான் மறு புதுப்பிப்பு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர், மேலும் பாதிக்கப்பட்ட கட்டிடத்தில் இருந்த மற்ற நபர்களையும் அங்கிருந்து பாதுகாப்பாக அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த வெடிப்பு சம்பவம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் நகர மையத்தில் இருந்த கட்டிடத்தில் கடந்த ஜூன் மாத ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தை தான் நினைவுப்படுத்துகிறது.

இந்த தீ விபத்தில் 3 பேர் வரை உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...