பிரான்ஸின் பாரிஸ் நகர குடியிருப்பில் வெடிப்பு விபத்து: 5 பேர் படுகாயம்
உலகம்செய்திகள்

பிரான்ஸின் பாரிஸ் நகர குடியிருப்பில் வெடிப்பு விபத்து: 5 பேர் படுகாயம்

Share

பிரான்ஸின் பாரிஸ் நகர குடியிருப்பில் வெடிப்பு விபத்து: 5 பேர் படுகாயம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் 5 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

வடக்கு பாரிஸில் உள்ள குடியிருப்பு பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட திடீர் வெடிப்பு விபத்தில் 5 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக பொலிஸார் மற்றும் அவசர சேவைகள் தகவல் தெரிவித்துள்ளன.

18வது அரோண்டிஸ்மென்ட் (Arrondissement) பகுதியில் இந்த சக்தி குறைந்த வெடிப்பு விபத்து ஏற்பட்டுள்ளது, ஆனால் இந்த திடீர் வெடிப்பை தொடர்ந்து எத்தகைய தீ பரவல் சம்பவங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கட்டிடத்தின் ஜன்னல் மற்றும் சுவர் பகுதிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. சேதமடைந்த கட்டிடம் சமீபத்தில் தான் மறு புதுப்பிப்பு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர், மேலும் பாதிக்கப்பட்ட கட்டிடத்தில் இருந்த மற்ற நபர்களையும் அங்கிருந்து பாதுகாப்பாக அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த வெடிப்பு சம்பவம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் நகர மையத்தில் இருந்த கட்டிடத்தில் கடந்த ஜூன் மாத ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தை தான் நினைவுப்படுத்துகிறது.

இந்த தீ விபத்தில் 3 பேர் வரை உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...