பிரான்ஸின் பாரிஸ் நகர குடியிருப்பில் வெடிப்பு விபத்து: 5 பேர் படுகாயம்
உலகம்செய்திகள்

பிரான்ஸின் பாரிஸ் நகர குடியிருப்பில் வெடிப்பு விபத்து: 5 பேர் படுகாயம்

Share

பிரான்ஸின் பாரிஸ் நகர குடியிருப்பில் வெடிப்பு விபத்து: 5 பேர் படுகாயம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் 5 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

வடக்கு பாரிஸில் உள்ள குடியிருப்பு பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட திடீர் வெடிப்பு விபத்தில் 5 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக பொலிஸார் மற்றும் அவசர சேவைகள் தகவல் தெரிவித்துள்ளன.

18வது அரோண்டிஸ்மென்ட் (Arrondissement) பகுதியில் இந்த சக்தி குறைந்த வெடிப்பு விபத்து ஏற்பட்டுள்ளது, ஆனால் இந்த திடீர் வெடிப்பை தொடர்ந்து எத்தகைய தீ பரவல் சம்பவங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கட்டிடத்தின் ஜன்னல் மற்றும் சுவர் பகுதிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. சேதமடைந்த கட்டிடம் சமீபத்தில் தான் மறு புதுப்பிப்பு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர், மேலும் பாதிக்கப்பட்ட கட்டிடத்தில் இருந்த மற்ற நபர்களையும் அங்கிருந்து பாதுகாப்பாக அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த வெடிப்பு சம்பவம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் நகர மையத்தில் இருந்த கட்டிடத்தில் கடந்த ஜூன் மாத ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தை தான் நினைவுப்படுத்துகிறது.

இந்த தீ விபத்தில் 3 பேர் வரை உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...